இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

டிசம்பர்-3 2010 அன்று நடைபெற்ற ஊர்வலத்தைப்பற்றிய நாளிதல் செய்தி நறுக்குகள்

                  டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் மறுநாள் காலை செய்தி  தாள்களில்  பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்

டிசம்பர்-3 ஊர்வலத்தின் டீவி ஒளிபரப்பு

                டிசம்பர்-3 (இன்று) காலை நடைபெற்ற "விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தின்" டீவி நிகழ்ச்சி

டிசம்பர்-3 2010 அன்று
கிளாக் டீவியில் ஒளிபரப்பப்பட்டது
 

S.TV-யில் ஒளிபரப்பப்பட்டது

Ten TV-யில் ஒளிபரப்பப்பட்டது

 


டிசம்பர்-3 2010 அன்று மாலை செய்தி நறுக்குகள்

                      டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் அன்று  மாலை செய்தி  தாள்களில்  பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்

மாலை முரசு

மாலை மலர்

காவல்துறையின் கனிவு

                         இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தில் எனது மனதை பாதித்த ஒரு நிகழ்வினை இந்த பதிவின் மூலம் கூற கடமைப்பட்டுள்ளேன்.

                     மாற்றுத்திறனுடையோரின் உணர்வை மதித்து நமக்கு எந்த இடத்திலும் எந்தஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஊர்வலத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கிய திருச்சி கண்டோண்மெண்ட் காவல் நிலையத்திற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வது இந்த நேரத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். 

வழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்.

               டிசம்பர்-3 உலக ஊனமுற்றோர் (மாற்றுத்திறனுடையோர்) தினத்தினை முன்னிட்டு நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒரு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது.

                இவ்வூர்வலம் திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையம் முன்புள்ள காதிகிராப்ட் மைதானத்திலிருந்து அரிஸ்டோ வழியாக மிளகுபாறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெஸ்லி பள்ளி எதிரில் முடிக்க கிட்டமிடப்பட்டு காலை 10.30 மணிக்கு துவக்கி 11.30 மணிக்குள் திட்டமிடப்பட்டபடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

முக்கியச் செய்தி

                            நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மாற்றத்திறனுடையோர் சம்மந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள், முக்கிய செய்திகள் மற்றும் மாற்றுத்திறனுடையோர்க்கு பயனளிக்கக்கூடும் என நினைக்கும் அனைத்து செய்திகளையும் குறுந்தகவல் (SMS) மூலம் சற்றேரக்குறைய 600 நபர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றது. 

மாற்றுத்திறனுடையோர்க்கு ஊர்திப்படி (Conveyance Allowance) உயர்வு

                   தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனுடையோர்க்கான பயணப்படி எனப்படும் ஊர்திப்படியினை ரூபாய் 300லிருந்து ரூபாய் 1000மாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செந்தமிழும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புகளும்

                   "சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும்
                    என் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்"

                                            என்கிற பாவேந்தரின் வாக்கினைப் பின்பற்றி, தமிழின் தொண்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாட்டுக்கலையறிவு வெளிப்பாடு, பிற மொழித்தாக்கமில்லாத்தன்மை, குறைவற்ற இலக்கிய வளம், உயர் சிந்தனைகள், கலையிலக்கிய தனித்தன்மை, மொழிக்கோட்பாடுகள் போன்ற டசெம்மொழித்தகுதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருவதை வரலாறுகள் சொல்கின்றன.

நன்றி அறிவிப்பு பிரச்சாரம்

                    கடந்த 19.08.2008 அன்று தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளர்களும் ஒன்றினைந்து பதினோரம்சக் கோரிக்கைகளை வழியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.  அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் அதில் ஒன்பது கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டார்.  அதுமுதல் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்காக பல திட்டங்களை அறிவித்துவருகிறார்.  

                     அதற்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றிதெரிவிப்பதற்காகவும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரியும் குமரிமுதல் கோட்டைவரை நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுத்துறை

LAB TECHNICIAN COURSES: (DMLT)
இரத்தப் பரிசோதகர் பயிற்சி:

             மேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 
கடைசித்தேதி : 13.09.2010
தகுதி                  : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)
வயது வரம்பு  : 18 முதல் 30 வயது வரை
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு மார்பளவு புகைப்படம், மற்றும் படித்ததற்கான சான்றிதல்களுடன் மாற்றுத்திறனுடையோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏமாற்றும் ஏர்டெல் பேட்டரி கார்கள்

                     பல முக்கியமான இரயில் நிலையங்களில் தனியார் நிறுவனமான பார்திஏர்டெல் மூலமாக பேட்டரி மூலம் ஓடக்கூடிய அருமையான கார்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன.  இது இந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும், சமூகசேவைக்காகவும் இருக்கலாம்.  எந்த வகையில் இருந்தாலும் அந்த முயற்சியினை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு அருமையான திட்டமாகும். அதற்காகத்தான் அந்த நிறுவனத்தினை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் எனக் கூறினேன்.

                   இத்திட்டம் ஏர்டெல் நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் அனைவருக்கும் அருமையான சேவையை செய்தன இந்த பேட்டரி கார்கள்.  நாட்கள் செல்லச்செல்ல அரசாங்கத்தின் திட்டங்களைப்போன்றே இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது.  காரணமாக இடையிடையே நடக்கும் சம்பவங்களைக் கூறினாலும் நேற்று சென்னையிலும் திருச்சியிலும் நடந்த சம்பவங்களைக் கூறலாம்.

அரசு வேலை

              திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது விநியோக திட்டம் கூட்டுறவு  சங்கத்தின் துணைப் பதிவாளரால் அறிவிக்கப்பட்ட மாதம் ரூபாய் 3000ம் தொகுப்பூதியம் கொண்ட 171 விற்பனையாளர் பணியிடங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரை செய்யப்படவுள்ளது. 

கல்விக்கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் விலக்கு


                         கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரியார் ஈ.வி.ஆர் கல்லூரியிலிருந்து இரண்டாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவனிடமிருந்து என்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 

                          அதே கல்லூரியில் சென்றவருடம் மாற்றுத் திறனுடையோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். (மற்றவர்கள் பின்னோக்கிய இடுகைகளை பார்க்கவும்). அந்த முகாம் மூலமாக நமது மக்களுக்கு அரசின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மாணவமாணவியருக்கு கல்விக்கட்டணம் இரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணையின் நகல் மற்றும் மற்றபிற மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசாணையின் நகல்களும் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.

அதிகாரி முருகன் ஐ.ஏ.எஸ்(!) - சிந்தனையில் ஊனம்

                        பார்ப்பனிய நஞ்சைச் சுமந்து வரும் வார ஏடு துக்ளக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.(!) அதிகாரி முருகன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மீது பாய்ந்து கடித்திருக்கிறார். 30.06.2010 துக்ளக்கில் “உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு, அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது வேறு என்பதைத் தமிழக முதல்வர் உணரவேண்டும் ” என்று எழுதியிருக்கிறார். இதைக் கண்டித்துப் பார்வை யற்றோர் அமைப்புகளின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதமும் அடுத்த (14.7.2010) துக்ளக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனுடையோர்க்கு சுயதொழில் விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்பு முகாம்

                   திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளர்களுக்கான சுயதொழில் விழிப்புணர்வு முகாம் மற்றும் வேலை வாய்ப்பு முகாமினை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடத்தவிருக்கின்றது.

மாற்றுத்திறனாளர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விழா

            திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மற்றும் நேயம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர் மற்றும் மாற்றுத் திறனுடையோரின் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா இன்று காலை திருச்சி, மரக்கடை, சையது முர்துசா பள்ளியில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயனடைந்தனர்.

            இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.பி. மாரிக்கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகம் வழங்கும் விழா

                திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாக நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.
    
                இந்த வருடத்திற்கான விழாவினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்துடன்  நேயம் அறக்கட்டளையும் இணைந்து மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் இலவச சீறுடை வழங்கும் விழாவினையும் சேர்த்து நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The temple has a history of being insensitive to the differently-abled.



Bangalore:  NDTV reported on a young boy who was denied entry to a temple near Mysore because he was in a wheelchair. Further investigations reveal that the same temple has a history of being insensitive to the differently-abled. This incident shocked many, but it was not an isolated case. NDTV spoke to N Mamatha, who was not allowed to enter the same temple in her wheelchair way back in 2005.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்புகள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையயத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:
கல்வித் தகுதி :  குறைந்தது 10 வகுப்பு தேர்ச்சி
வயது                 :  குறைந்தது 21 (01.07.2010 அன்று) அதிகபட்சம் 40வயது
ஊனத்தின் சதவீதம் : 40 முதல் 50க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணத்திலிருந்து முழு விலக்களிக்கப்படுகிறது. (வருமான உச்சவரம்பின்றி)

பகுதி - 14 - சட்டம் 1995 - அத்தியாயம் - 4

அத்தியாயம் - 4
ஊனங்கள் ஆரம்ப காலத்திலேயே அறியப்படல், மற்றும் தடுக்கப்படல் தக்க அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊனங்கள் ஏற்படுவதை தடுக்க சில நடவடிக்கைகள் எடுத்தல்

பிரிவு:25. ஊனங்கள் ஏற்படுவதை தடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு தக்க அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தன் பொருளாதார ஏற்றத்துக்கும், திறனுக்கும் ஏற்ப:-

அ. ஊனங்கள் ஏற்படுவதன் காரணங்கள் சம்பந்தமான ஆய்வு, புலனாய்வு மற்றும் கணக்கெடுத்தல் இவற்றை மேற்கொள்ளல், அல்லது மேற்கொள்ளப்பட காரணமாதல்.

பகுதி - 13 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3


மாநில செயற்குழு
பி.19.து.பி.1. இச்சட்டத்தின் கீழ் தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள மாநில செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை மாநில அரசு நிறுவ வேண்டும்.
து.பி.2. மாநில செயற்குழுவில் அடங்கி உள்ளவர்கள்:-

            அ. சமூக நலத்துறை செயலர் வகிக்கும் பதவியால் தலைவர்.

            ஆ. ஆணையர் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.

பகுதி - 12 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3

மாநில ஒருங்கிணைப்பு கூட்டங்கள்
பி.17. மாநில ஒருங்கிணைப்புக் குழு, 5 மாதங்களுக்கு ஒரு முறை கூட வகுத்துரைக்க உள்ளபடி தனது கூட்டங்களில் பணிகளை மேற்கொள்ளும்போது விதிகளை அனுசரிக்கும்.
மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணிகள் 
பி.18.து.பி.1. மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணி யாதெனில் இச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, ஊனங்கள் பற்றிய விஷயங்களில் மாநில தலைமை மையமாக செயல்பட்டு ஊனமுற்ற நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க விரிவான கொள்கை தொடர்ந்து பரிணமிக்க ஆவன செய்தல்.

மாற்றுத்திறனாளர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து - தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை

பகுதி - 11 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3



உறுப்பினர்களின் சேவை விதிகள் வரைமுறைகள்:

              பி.14.து.பி.(1). இச்சட்டத்தின் கீழ் அல்லது இச்சட்டத்தால் வேறு வகையில் வழங்கப்பட்டாலன்றி விதி (ஊ) அல்லது விதி (ஏ) து.பி.2. பி.3யின்படி நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டது முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார்.  இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிந்துவிடட போதிலும் தனக்குப் பின் வருபவர் பதவி ஏற்கும் வரை உறுப்பினர் தனது பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.

            து.பி.(2) வகிக்கும் பதவியால் உறுப்பினரின் பதவி தான் உறுப்பினராக நியமிக்கப்பட  காரணமான பதவியில் இல்லாமல் போனால் உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வந்துவிடும்.

பார்வையற்ற குழந்தைகளுக்கு உதவ ஒரு கருவி.

22 ஜீலை 2010ம் தேதிய புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை.

                 பார்வைத் திறனற்ற குழந்தைகள் பாதையில் ஒளி விளக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு கருவி.  பெயர் விழிவழங்கி.  இதனைக் கண்டுபிடித்திருப்பவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகக் கணிணிப் பேராசிரியை அமுதா. இதன் செயல்பாடுகளை அவரே விளக்குகிறார்.

சீர்கேடு எற்பட்டது யாரால்? - பார்வையற்றோர் சங்கம் நேத்தியடி

கடந்த 30.06.2010ம் தேதிய துக்ளக் இதழில் என்.முருகன் என்ற ஓய்வு பெற்ற அவசர ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய கால்புணர்ச்சி கட்டுரைக்கு பதிலடியாக கோவையைச் சேர்ந்த பார்வையற்றவர்களின் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகியன தக்க பதிலளித்துள்ளன.

             30.06.2010 தேதியிட்ட "துக்ளக்" இதழில், "நிர்வாகச் சீர்கேடுகள்" என்றும் தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.  அது குறித்து சில கருத்துக்களை முன்வைப்பது எங்கள்  கடமையெனக் கருதுகிறோம்.

Monthly meeting 04.07.2010


Trichy district differently abled association's monthly meeting held on Sunday. The district secretary of the association Marikkannan was preside the meeting. differently abled government employees association's state joint secretary subramaniyan was presence.



in this meeting following resolutions are taken, such as



1. Expose our thanks to railway minister Mamtha Banarji and Tamilnadu CM for implementing of special unreserved coaches in trains for differently abled.

2. Should take need ful action to give free note books for diffidently abled students in next week.

3.Condemn the Murugan I.A.S(rtd.) for his unlike statement in Thuklak magazine against the differently abled which makes wound the heart of differently abled.

District vice president Krishnasamy, differently abled government employees association's Bakyaraj, Organizer Devarajan, Executive membrs Mariyappan, Lakshmanan, Kannan, Subramani and members participated in this meeting.

மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு

             கடலூர்:சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத்திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில்,  10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், சிறுமியால் கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை என தெரிய வந்தது. 

பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை சிறப்பு முகாமில் அமைச்சர் பங்கேற்பு

               திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணச்சலுகை மற்றும் திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நிர்ணயித்த இலக்கை தாண்டியது மாற்றுத்திறனாளி பள்ளி சேர்க்கை

                  திருச்சி: ""தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துள்ளது,'' என்று கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக புள்ளவிபரம் தெரிவிக்கிறது.

                      அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5,109 பேர் இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், கிராம செவிலியர்கள், மறுவாழ்வுத்திட்ட அலுவலர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் 319 மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, எஸ்.எஸ்.ஏ., சார்பில் மொத்தம் 5,235 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை தொடரும் பணியில் மேலும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். மனநிலை பாதிக்கப்பட்ட மாணவரை, சாதாரண மாணவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க முடியாது. சிறப்புப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு

               நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

              பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

                   முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

வீட்டிலேயே கல்வி

                    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீட்டிற் கே சென்று சிறப்பாசிரியர்கள் கல்வி வழங்க வேண்டும்” என கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய கண்காணிப்பாளர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மாவட்டத்தில் ஆறு முதல் 14 வயதிற்கு உட் பட்ட பள்ளி செல்லா குழந் தைகள் அனைவரையும் கண்டறிந்து, ஒரு மாதத் திற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும். 

நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இனி நாம் இரயில் பெட்டியில் முன்பதிவின்றி பயணம் செய்யலாம்.

             கடந்த 30.06.2009 வரை மாற்றுத்திறனுடையோராகிய நாம் இரயிலில் பயணம் செய்ய எட்டுபேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இணைக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் சாதாரண பயணச்சீட்டுடன் பயணம் செய்யும் வசதியிருந்தது.

             ஆனால் 01.07.2009 முதல் அந்த சிறப்புப் பெட்டி முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டது. அதில் மாற்றுத்திறனுடையோர் முன்பதிவு செய்தே பயணம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அரியாமை

துக்ளக் வார இதழ் (30-06-2010) செய்தி:

             தற்போது, தமிழக முதல்வர் திடீரென்று எப்போதும் இல்லாத அளவிற்கு,  உடல் உறுப்புகளில் குறையுள்ளவர்கள்பால் அதிக அக்கரை எடுத்து, அவர்களை "மாற்றுத்திறனாளிகள்" என வகைப்படுத்தி, அவர்களுக்கென்று தனி துறையை ஏற்படுத்தி, பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.

            1975-ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு வேலை வாய்ப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்னுரிமை அளித்து, அரசு வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நடைமுறை உண்டு.  இவர்களில் பலரும் அரசு வேலையில் சேர்ந்த பின்னர், ஒழுஙிகீனங்களில் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை - நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

மாற்றுத்திறனுடையோர்கு புற்றுநோய்?


                       நான் 1991ம் ஆண்டு எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இடதுகாலை முழுமையாக இழந்தவன்.  இன்று புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்து கடின முயற்சிக்குப்பிறகு புற்றுநோயின் கோடுமையினை மறந்து (ஆம் அதனைக் கொடுமையென்றே கூற வேண்டும்.

பகுதி - 10 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3

அத்தியாயம் - 3.

மாநில ஒருந்கிணைப்பு குழு : - 
             பி.(13). து.பி.(1) ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பாணை மூலம் மாநில ஒருங்கிணைப்பு குழு  என ஒரு அமைப்பை நிறுவி இச்சட்டத்தின் கீழ் அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

பகுதி - 9 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

மத்திய செயற்குழு

து.பி (1) 
              மத்திய செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை, மத்திய அரசு நியமித்து இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள செய்ய வேண்டும்.

து.பி (2)        மத்திய செயற்குழுவில் இடம் பெறுபவர்கள் : -

             அ. இந்திய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலர், வகிக்கும் பதவியால் தலைவர்.

பகுதி - 8 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகல்

6. மத்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஒருவர், பிரிவு ஐந்தில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தகுதியிழப்பிற்கு ஆட்பட்டால் அவரது பதவி காலியாகிவிடும்
மத்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்

7. மத்திய ஒருங்கிணைப்பு குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி மத்திய அரசு வகுத்துள்ளபடி, தனது கூட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக செயல்முறை ளவிதிகளை பின்பற்ற வேண்டும்.

பகுதி - 7 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

அத்தியாயம் - 2
உறுப்பினர் பதவிக்காலம்

4.            1)  இச்சட்டத்தின் கீழ், அல்லது இச்சட்டத்தின்படி, டவேறு விதமாக அளிக்கப்பட்டாலன்றி, மத்திய ஒருங்கிணைப்பு குழுவிற்கு, பிரிவு மூன்று துணைப்பிரிவு இரண்டு உட்பிரிவு ஒன்று அல்லது எல் படி நியமிக்கப்படுவர்,  நியமனத் தேதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார்.

                அத்துடன் இவ்வுறுப்பினர், தம் பதவிக்காலம் முடிந்துவிட்ட டபோதிலும் தனது பின்வர் அப்பதவிக்கு வரும்வரை பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.

பகுதி - 6 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

அத்தியாயம் - 2
மத்திய ஒருங்கிணைப்பு குழு

3.
                   1) மத்திய அரசு, அறிவிக்கையின் மூலம் "மத்திய ஒருங்கிணைப்பு குழு"  ஒரு அமைப்பை நிறுவி, இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளவும், செய்யவும் வேண்டும்.

                  2) மத்திய ஒருங்கிணைப்பு குழுவிடம் இடம் பெறுபவர்கள்:-
                                        அ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வகிக்கும் பதவியால் தலைவர்.

                                        ஆ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சர், வகிக்கும் பதவியால் துணைத் தலைவர்,

பகுதி - 5 - சட்டம் 1995 - அத்தியாயம் - 1

(ஒ) "பணி அளிப்பவர்" என்பவர்
          (1)  அரசைப் பொறுத்த வரையில் துறைத் தலைவர் தன் சார்பாக நியமிக்கும் ஓர் அதிகாரி அல்லது இவ்வாறு எந்த அதிகாரியும் நியமிக்கப்படாத போது, தறைத் தலைவர்  மற்றும்,
  
            (2)  ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் முதன்மை நிர்வாக  அதிகாரி ஆவார்.

(ஓ) "நிறுவனம்" என்பது மத்திய பிராந்திய அல்லது மாநில சட்டத்தின் கீழ் அல்லது சட்டத்தால் நிறுவப்படும் ஒரு கழகம் அல்லது அரசோ, உள்ளாட்சி அமைப்போ நடத்தும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது உதவும் ஒரு அதிகார அமைப்பு அல்லது குழு அல்லது 1956 (1-1956) கம்பேனிகள் சட்டத்தின் கீழ் பிரிவு 617ன் படியான தன்னகத்தே அரசின் துறைகளை கொண்டுள்ள ஓர் அரசு கம்பெனி.

பகுதி - 4 - சட்டம் 1995 - அத்தியாயம் - 1

அத்தியாயம் - 1
பூர்வாங்கம்
சிறு தலைப்பு
அளவு மற்றும் ஆரம்பம்

1. 
1)  இச்சட்டம், ஊனமுற்ற நபர்களுக்கான (பராமரிப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழு பங்கேற்பு) சட்டம் 1995, என அழைக்கப்படுவதாக.

2) இந்தியா முழுமைக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இது விரியும்

3) மைய அரசு, அறிவிக்கையின் மூலம் நியமிக்கும் தேதியிலிருந்து இது அமுலக்கு வரும்.

இலக்கணங்கள்

2. 
 இச்சட்டத்தில், இடத்திற்கேற்ப வேறு வகையில் தேவைப்பட்டால் அன்றி  
(அ) "முறையான அரசு" என்பது

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 முதல் 14 முடிய) (பகுதி - 3)

5. கல்வி முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி முதலியன அளித்தல்.

முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் முறைசாரா கல்விக்கான திட்டங்கள் ஏற்பாடுகள் செய்தல்.

புதிய உதவி உபகரணங்கள் கற்பிக்க உபகரணங்கள் வடிவமைத்து உருவாக்க ஆய்வுகள்.

மாநிலம் தழுவிய மாநாடு

  அர்ப்பணிப்பு உணர்வோடும், சேவை மனப்பாங்குடனும் அரசுப்பணியாற்றிவரும் ்மாற்றுத்திறனாளித் தோழர்களே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!

          மாற்றுத்திறனாளிகளாகிய நாம், நமது பணியினை பிறரைப்போலவே திறம்படவும், பிறரைவிடப் பொறுப்புணர்வுடனும் அனைத்து சூழ்நிலைகளிலும் செவ்வனே செய்து வருகின்றோம். இருப்பினும் நமக்கென அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை நாம் முழுமையாகப் பெறுவதில் உள்ள சிக்கல்களை, நாமே முயன்று தீர்த்துக்கொள்ளும்

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 வரை) (பகுதி - 2)

பதிவு எண்:டி.எல்.33004/96
பிரத்தியோக இந்திய அரசிதழ்.

பகுதி - 2, பிரிவு - 1.

அதிகாரபூர்வ வெளியீடு ----------------
எண்:1, புதுடில்லி, திங்கள் ஜனவரி 1,1996
பவுசா - 11                         1917
தனி தொகுப்பாக வைக்கும பொருட்டு இப்பகுதிக்கு தனித்தனி பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

சட்டம் நீதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் (சட்டத்துறை)
1 ஜனவரி 1996 புதுடில்லி பவுசா - 11     1917(ச.க.)

மாற்றுத்திறன் அரசுப்பணியாளர் மாநில மாநாடு



அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாடு
19-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

திருச்சி, ஜீன் 17, அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாநில மாநாடு வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சட்டம் 1995 (முன்னுரை)

வணக்கம்,

இந்தியாவில் மாற்றுத்திறனுடையோர்க்கான சட்டங்களை நாம் அறிந்துகொள்ளுவது மிகவும் பயனுள்ளதாகவும், அவசியமான ஒன்றாகவும் உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல்நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊனமுற்ற நபர்கள்  (சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995, மசோதாவினை தங்களுக்கு இந்த வலைத்தலம் மூலம் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.  இம்மசோதா ஊனமுற்ற நபர்களின் (மாற்றுத்திறன் என்ற சொல் அப்போழுது வழக்கத்தில் இல்லாததாலும், அரசியல் சட்ட வார்த்தைகளை நமது விருப்பப்படி மாற்றுவது தவறானது என்பதாலும் இந்த இடுகை முழுக்க ஊனமுறு:றோர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்) உரிமைகளை பாதுகாத்து நல்வாழ்வு  அளிப்பதில் நெடுந்தூரம் செல்லும் என்பதை மசோதாவின் பொருளடக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

2010 - சூன் மாத மாதாந்திர கூட்டம்

நமது சங்கத்தின் சூன் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம் வழக்கமான இடமான திருச்சி, மரக்கடை சையது முர்துஷா பள்ளியில் காலை 10மணிக்கு நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் செயலாளர் - மாரிக்கண்ணன், பொருளாளர் - வெங்கட்ராமன், காப்பாளர் - பாலகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் - சுப்பிரமணியன் மற்றும் சங்கத்தின் உறுப்பிளர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டத்திற்கு செயலாளர் - மாரிக்கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். 

கூட்டத்தின் முடிவில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) எதிர்வரும் சூலை மாதம் மாற்றுத்திறனாள மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் என நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டுபுத்தகங்கள் வழங்குவது,

டாஸ்மாக்-கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்கள் அமைப்பு மாநில கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் உடல் ஊனமுற்றோர் பணியாளர் நல்வாழ்வுச் சங்கத்தின் சார்பில் (இணைப்பு : தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு) 13.06.2010 அன்று சங்குருநாத மகாமுனிவர் சன்னதி, திருவாணைக்கோவில், திருச்சி என்ற இடத்தில் சங்க "சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்" நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.நாச்சியப்பன் தலைமையேற்றார். திரு. அரியக்குமார், மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்.  திரு.பூபதி, மாநில துணைத்தலைவர்,  தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.சையதுமுஸ்தபா, மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. மற்றும் திரு.புஷ்பராஜ், தென்மண்டல பொருளாளர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.மாரிக்கண்ணன், செயலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

திரு.பாரூக் - சிவகங்கை, திரு.முருகன் - மதுரை, திரு.பழனிச்சாமி - விழுப்புரம், திரு.கந்தகுமார் - திருநெல்வேலி, திரு.வேல்ச்சாமி - கடலூர், திரு. சண்முகம் - தூத்துக்குடி,  திரு. ஆறுமுகம் - திருச்சி திரு.எஸ்.சோமசுந்தரம் - கோவை ஆகியோர்

உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர். திரு. ஏகலைவன்

எதிர்வரும் உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர் திரு.ஏகலைவன் அவர்கள் பங்குபெற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் அழைக்கப்பட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளர்களால் நிர்வகிக்கப்படும் வலைப்பதிவுகள் குறித்து அவர் உறையாற்றவுள்ளார்.

அவருக்கு உதவிடும்பொருட்டு இதனை படிக்க வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளர்கள் நடத்திவரும் அனைத்து வலைப்பதிவுகளைப்பற்றியும் இதற்கு முந்தைய பதிவில் வழங்கப்பட்டுள்ள கவிஞர் திரு.ஏகலைவன் அவர்களுக்கு 23.06.2010க்கு முன்னர் தெரிவித்துதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விருதுகள் பல வெண்ற கவிஞர் திரு.ஏகலைவன்

சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர்,தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் (தன்னம்பிக்கைக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்) என்று தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார். 

தனது முதல் நூலான "பயணவழிப் பூக்கள்" கவிதைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 1)", "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 2)'', ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் போன்ற தொகுப்புகளின் வாயிலாக ஊனமுற்றோரின் சாதனைகளை புத்தகங்களாக்கி இருக்கிறார். "கல்விச் செல்வம்" என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள

இனி பேருந்திலும் பாதுகாவலருடன் பயணம் செய்யலாம்

மாற்றுத்திறனுடையோர் இரயில் பயணத்தின்போது எப்படி பாதுகாவலருடன் பயணம் செய்கின்றனரோ, அதனைப்போன்று இனி பேருந்திலும் பயணம் செய்யலாம் - என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. 

அந்த அறிவிப்பிற்கு தமிழக அரசு 30-05-2010 அன்றைய தேதியில் அரசாணை வழங்கியுள்ளது. 

அதன்படி ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்குட்பட்டு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் விருப்பம் போல பாதுகாவலருடனோ அல்லது தனித்தோ இனி பேருந்தில் பயணம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளர்கள் 38 பேருக்கு புத்தகம் கட்டுநர் பணி

பார்வையற்ற 38 மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் புத்தகம் கட்டுநர் பணியமர்த்தப்படும் என கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார் - செய்தி கலைஞர் தொலைக்காட்சி.

விரிவான செய்திகள் பின்னர்.

2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளிகளின் நிலை

தற்சமயம் 2011ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில் 2001ம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளர்களின் நிலை பற்றிய விவரங்கள் உங்களுக்காக விடுதலை வலைபதிப்பில் இருந்து.

சென்னை, மே 26-_ 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி நாட்டில் 64.8 சதவிகித-தினர் எழுத்தறிவு பெற்ற-வர்களாக உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்-சேரியின் எழுத்தறிவு வீதம் தேசிய சராசரியை-விட அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனுடையோர்,

ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்

            ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  
         2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.

ஐஏஎஸ் தேர்வு : மாற்றுத்திறன் படைத்த 30 பேர் தேர்ச்சி

2009ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் பணிகள் முக்கிய தேர்வு முடிவுகள் வியாழக் கிழமையன்று வெளியிடப்பட்டன. இதில் முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையை சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்களாவர். இந்த முடிவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு :

இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் 4,09,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,93,091 பேர் முதல் கட்டத் தேர்வு எழுதினர். இதில் 12,026 பேர் முக்கிய எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.

மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு

மாற்றுததிறனாளிகளநலவாரியமமற்றுமஅதனஅலுவல்சாரஉறுப்பினர்களினமூன்றாண்டபதவிக்காலம் முடிவடை‌ந்ததையொ‌ட்டு இவ்வாரியத்தினஉறுப்பினர்களகுழுவை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி திருத்தியமைத்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மாற்றுததிறனாளிகளினஉரிமைகளைபபாதுகாக்குமநோக்கிலஅவர்களுடைய முன்னேற்றத்திலசிறப்புக்கவனம் செலுத்துவதற்காதமிழஅரசதலைமைசசெயலகத்திலசமூநலமமற்றுமசத்துணவுத்திட்டததுறையிலிருந்தபிரித்து, தமதநேரடி கண்காணிப்பிலமாற்றுததிறனாளிகளநலத்துறஎன்னுமஒரபுதிதுறையஉருவாக்கியுள்முதலமைச்சரகருணாநிதி அத்துறைக்கஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைசசெயலாளராகவுமநியமனமசெய்துள்ளார்.

ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை

              ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

            ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.

அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்'

             தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஊனமுற்றோர் இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

             தஞ்சை அடுத்த வல்லம் எம்.ஜி.ஆர்., நகரில், 1994ம் ஆண்டு முதல், 'சந்திரா அறக்கட்டளை' என்ற பெயரில் உடல் ஊனமுற்றோர் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. அரசின் அனுமதி ஏதும் பெறாமல் இது செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2002ம் ஆண்டு, ஜான்பிரிட்டோ என்பவர் இந்த இல்லத்தை வாங்கினார். பாலமுருகன் அறக்கட்டளை உதவியுடன், இக்கட்டடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, போர்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து, இல்லம் நடந்து வந்தது. ஊனமுற்றோர் இல்லத்துக்கு அரசின் இளைஞர் நீதிச்சட்டம், உடல் ஊனமுற்றோருக்கான சமவாய்ப்பு, சமூக பாதுகாப்புச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.

                    இவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே, ஊனமுற்றவர்கள் உட்பட மாற்றுத் திறன் கொண்டவர்களை அங்கு தங்க அனுமதித்தல், அவர்களது பெற்றோரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு கண்காணித்தல் மற்றும் அரசின் நிதியுதவிகளை பெறுதல் போன்றவை செய்ய முடியும். இந்த இல்லத்துக்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. அடிப்படை வசதி இல்லை. இருந்தும், பெற்றோர் மற்றும் பிறர் உதவியால் இந்த இல்லம் செயல்பட்டது. நேற்று, தஞ்சை டி.ஆர்.ஓ., கருணாகரன் தலைமையில், அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு, செங்கம்பட்டி ராமராஜ் (18), திருக்கானூர்பட்டி மதியழகன் (12), வல்லம் சரத்குமார் (12) ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்தனர். முறையான அனுமதியின்றி அந்த இல்லம் செயல்பட்டதால், அந்த இல்லத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது
 
 

முதல்வர் கருணாநிதி தலைமையில் மாற்றுதிறனாளர்களுக்கு தனித்துறை

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சர் கருணா‌நி‌தி நேரடி மேற்பார்வையில் இயங்கும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில், உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களைக் குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல்

ஏப்.10ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,​ மாற்றுத் திறனாளிகளுக்கும் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா.​ ​ திருச்சி மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் பயிற்சியை மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் அன்மையில் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:​

மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்

பார்வையற்ற 95 மாற்றுததிறனாளிகளுக்கஅரசஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலபட்டதாரி ஆசிரியர்களாகபபணி நியமஆணைகளமுதலமைச்சரகருணாநிதி இன்றவழங்கினார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை

திரு.சுப.வீரபாண்டியன் ஐயா அவர்களின் உரை

                      மார்ச் 1 ஆம் தேதி காலை, கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். பேசி முடிந்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. “இன்றைக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறாய் . உன் பேச்சு என் மனதைத் தொட்டது. உடல் ஊனமுற்ற அந்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்கிறேன்” என்று அவர் சொன்னபோது வியப்பிலிருந்து விடுபட எனக்கு ஒரு நிமிடமாயிற்று.

2010 - 2011 ஆம் ஆண்டுக்கான தமிழக வரவு செலவு திட்டத்தில் மாற்றுத் திறனாளர் களுக்கான அம்சங்கள்

தமிழக அரசின் வலைத் தலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு குறிப்பிட்ட பகுதி மட்டும் இங்கே வழங்கப்படிருகின்றது.

மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

வாசகர்களின் கருத்திற்கு இணங்க இந்த பதிவு திரும்ப பெறப்படுகிறது. நன்றி.

பெரியார் EVR கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்


 
 
அமைப்பாளர்களாகிய திருமதி.புவனேஸ்வரி, திருமதி.அங்கம்மாள், திரு.ராஜேந்திரன்  ஆகிய பேராசிரியர்கள் இந்த விழிப்புணர்வு முகாமிற்கு முன்னின்று ஏற்பாடு செய்தனர். 

இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியை திருமதி.புவனேஸ்வரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் திருமதி.ஜெசிந்த  அவர்கள் துவக்கவுரையற்றினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.மாரிக்கண்ணன் அவர்கள் அரசினால் மாற்றுத்திறனுடையோர்க்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார், 

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் திரு.வெங்கட்ராமன் மாற்றுத்திறனுடையோர் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றிக்கான தீர்வுகளும் பற்றி உரையாடினார். 

வழக்கறிஞர் திரு.வின்சென்ட் அவர்கள் தகவலறியும் உரிமை சட்டம் பற்றியும் அதனை பயன்படுத்தும் விதம் பற்றியும் அந்த சட்டம் குறித்த  தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

வழக்கறிஞர் திரு.மார்டின் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்கான இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் 2007 ம் ஆண்டில் ஐ.நா சபை அறிவித்த பிரகடணம் ஆகியவை பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த முகாமில் இதே கல்லூரியில் பயிலும் 36 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




கடந்த 4ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

 
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

எனது மனம் கவர்ந்த கவிதைகள்

கனவு வாழ்க்கை போதுமெனக்கு...

கண் பார்வையிழந்து
கடந்தன இருபது ஆண்டுகள்
என்றாலும்
என் பாட்டியை ஒருநாள் இரவு பார்த்தேன்
நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்தவள்!
அதே முகம், அஹ்டே கனிவு
அதே சிவந்த நிறம்‍ மறுநாள்
எனக்குள் கொள்ளை மகிழ்ச்சி.

இன்னொரு நாள் கனவில்...
இருபதாண்டுகளுக்குமுன் மருத்துவமனையில்
என்னைச் சேர்த்தபொழுது கண்ணீர்விட்ட
என் தந்தை வந்தார்.
இறுக்கமான மனிதருக்குள் எத்தனை அன்பு

எனக்குள் இன்னும்
மிச்சமிருக்கிறது அவர் ஆளுமை
அவரின் தந்தைபேறு
என் தவம்
இன்னொரு நாள் கனவில் என் தாய்...
என்னோடு சேர்த்து
எட்டுக்குழந்தைகளை ஆளாக்கியவர்.
எத்தனை வதைகள்,எத்தனை வேதனைகள்
எல்லாமே நான் பார்க்க அனுபவித்தவை
அருகில் வைத்து தடவிக்கொடுத்தார் என்னை
கண்ணீர் விட்டேன் கனவிலும்...

எனக்குள் உயிர்ப்பாய்
இன்றும் இவர்கள்
கனவுக் காட்சிகள் போதும்
எனக்கு...
கவிஞர் கோவை ஞானி


புதிய கண்ணகி

அரசின்
கருணைத் தொகைக்காக‌
அலையாயலைந்தாள்
அந்த விதவை

கையெழுத்துக்கள்
பல வாங்கிக் கொடுத்தாள்

கடைசியில்
அந்தப் பணமும் வந்தது
பணத்தை கொடுத்த‌
அலுவலர் கை நீட்டினார்...

நீயும்
விதவை தானா?
அவன் முகத்தில்
விசிறியடித்தாள்
பணத்தை...
கவிஞர் கர்ணன்
மதுரை.


திருநங்கை

ஆண்பாலிலும் அகப்படவில்லை
பெண்பாலிலும் பொருத்தமில்லை
அரவாணி என ஆகிவிட்டதால்
அரவணைக்கக் கூட யாருமில்லை

விலங்கு, பறவை
தாவரம் மனிதரென‌
அனைத்தும் அடையாளப்
பெயர் பெற்று அடைகின்றது கௌரவமே!
நாங்கள் மட்டும்
அடையாளம் காணாத‌
ஆச்சர்யக் குறியானோம்

அவலமே கண்டு கண்டு
அவனியிலே நொந்துவிட்டோம்
மனிதனையே மதிக்காத சமூகம்
மனிதனாகவே எண் ணாதவரையா மதிக்கும்?

குரோமோசோமின் குறும்பதுவால்
குழப்பமே வாழ்வானது
குனியக் குட்டும் சமுதாயத்தில்
மனமும் கூட தாழ்வானது

விதியை மீறிய விளையாட்டை
இயற்கை எப்படி ஈடுசெய்யும்?
விளக்க முடியா பதிலுக்கு
வினாக்குறியே விடையாகும்.

கவிஞர் இரா.சுமதி
தேனி


நம்பிக்கை

வீழ்வது பற்றி
ஒருபோதும்
எங்களுக்கு
கவலையில்லை
எழுவது உறுதி
என்பதால்...

கவிஞர் சே. ஜெயக்குமார்
சென்னை


பிரசவ வேதனை

ஆண்டவனே
பிரசவ வேதனையை
பெண்களுக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்?

அக்னி சாட்சியாக‌
இன்ப துன்பங்களை
பகிர்ந்து வாழ்கிறோம் என்று
சங்கல்பம் கொண்டதை
நீயே பொய்த்து விட்டாயே?

அன்பின் வெளிப்பாட்டில்
ஒரு அராஜகமா?
ஆசை முத்தத்திற்கு
ஆயுள் தண்டனையா?

இறைவா
சிசுவை வெளிகொணர‌
அகிம்சை வழிகளை சிருஷ்டிக்க‌
ஏன் மறந்தாய்?

அடுத்த ஜென்மத்தில்
என்னை பெண்ணாகவும்
அவளை எனக்குரிய ஆணாகவும்
படைப்பாய் ஆணடவனே!

அவளிடம்
இதனை சொல்லிவிடாதே
அவள் என்ன சொல்வாள் என்று
நான் கூறவும் வேண்டுமா?

கவிஞர் வெ. எழிலரசன்
சேலம்


நீயும் ஆண்டவன் தான்...

சுழி போட்டு
செயல் தொடங்கும்
விநாயகப் பெருமான்
முழுமுகம் இல்லாதவன்

ஜாதகத்தில்
உச்சத்தில் நன்மையாம்
குரு தட்சிணாமூர்த்தி
ஒரு கால் இல்லாதவன்

சகல் காரியமும்
நடக்க வைக்கும்
சண்டீகேசுவரன்
இரு காது கேட்காதவன்

ஒரு
அவதாரத்தில்
அம்மன் கூட‌
விகாரமானவள்

அட விடுங்கள்
அகிலத்தையே
ஆட்சி நடத்துவதாய் கூறும்
சிவன் கூட‌
அர்த்தநாரீஸ்வரர்

ஊனமானவனே!
உரக்கச் சொல்கிறேன்
நீயும் ஆண்டவன் தான்
உயர்ந்த இடத்தில் இருப்பதால்...

அரசு ஆணைப்படி
நீ மாற்றுத்திறானுடையவன் மாற்றானை விட நீ திறமையானவன்

பிறகெதற்கு
ஊனத்தை பற்றி
ஒப்பாரி வைக்கிறாய்
நன்றாக
உழைத்து எரி
உன் தீபத்தில்
உலகம் ஒளி பெறட்டும்

கவிஞர் கவி.பெரியசாமி
கரூர்



கல்விக்கண் காமராஜர்

இன்று விலைபோகும் கல்வியை
அன்றே இலைபோட்டு பரிமாறியவர்
ஜாதிமத வேறுபாடின்றி
வீதிதோறும் கல்வியை விதைத்தவர்!

கனவுகளோடு பள்ளி வந்த‌
சின்னஞ் சிறார்க்கும்
உணவளித்த மூத்தவர்!
விளையாட்டுப் பிள்ளைகளையும்
நல்ல சிலையாக வடிக்கும்
கல்வியெனும் கலையறிந்த கலைஞர்!

ஆடுமேய்த்தவன் கையிலும்
ஏடுகொடுத்த சித்தர்!
சாணம் சுமந்த சிறுவனுக்கும்
ஞானம் போதித்த புத்தர்!

தமிழகத்து பட்டதாரிகளுக்கெல்லாம்
சுயவேலை திட்டம் கொடுத்து
வரலாறு படைத்தவர்!

அறியாமையை தன்
அறிவாலே உடைத்தவர்!

மாட மாளிகைகள் கட்டாமல்
பாட சாலைகள் கட்டிய‌
முதல்வர்!
ஒவ்வொரு தமிழ் வீட்டிற்கும்
தத்துப் புதல்வர்!

மாக்களாக இருந்தவர்களை
மக்களாக மாற்றிய மனிதர்!
நகரமாக இருந்த சமூகத்தை
சிகரமாக மாற்றிய புனிதர்!

படிக்காத மேதையே!
உன்னை படிக்காத மேதை
எவரெம்று சொல்!
உன் பெயர் தான்
மனங்கள் என்றும்
உச்சரிக்கும் சொல்...!

கவிஞர்.துளிர்
மதுரை

முதல்வரின் அறிக்கை


ஊனமுற்றோருக்கான பெரிய திட்டத்தை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுப்போம்: கருணாநிதி

திருச்சி, மார்ச்.4-திருச்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில், மாற்றுத் திறனாளிகளின் நன்மைக்காக ஐ.நா. மன்றத்திலே எல்லா நாடுகளும் ஒத்துக் கொண்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியா முழுமையும் உள்ள ஊனமுற்றோருக்கு- அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்பந்தப்படி வசதி வாய்ப்புகள், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனவா என்றால் இல்லை. நான் அதைப்பற்றி இந்த ஆண்டு நம்முடைய நிதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட விருக்கின்ற நிதி நிலை அறிக்கையில் - மத்திய அரசு அன்றைக்கு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றி -இந்தியாவிலே இருக்கின்ற ஊனமுற்றோருக்கெல்லாம் நன்மைகளைச் செய்ய வேண்டும், உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக இருக்கிறோம். தமிழ்நாடு அரசும் சேர்ந்து தான் இந்திய அரசோடு ஒத்துழைத்து அந்த இயலாதவர்களுக்கு மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படுகின்ற காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற முறையில் தான் அதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இப்போது ஏழையெளியோருக்கு குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விட பெரிய திட்டம், இந்தத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கும்போதே, அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வர இந்த அரசு ஆவன செய்யும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

நன்றி: மாலைமலர்
http://www.maalaimalar.com/2010/03/04040203/political.html

மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமையை நிலை நாட்டுவோம்: கருணாநிதி உறுதி

மாற்றுத் திறன் படைத்தோருக்கு அரசு சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு எனவும், தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும்

மாற்றுதிறன்

மாற்றுதிறன் மக்களின் மனதிடத்தினை வளுப்படுத்துவதர்க்காகவும் ஊனதைப்பற்றிய விழிப்புணர்வு பெறுவருவதர்க்கவும் இங்கே ஒருசில வீடியோ படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மற்ற அமைப்புகள் மூலமும் நண்பர்கள் மூலமும் பெறப்பட்டுள்ளன. இதனைப்போன்ற வீடியோக்கள் தங்கள் வசம் இருந்தால் மற்ற மாற்றுதிறன் மக்களின் நன்மை கருதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.



ஊனமுற்றோருக்கான உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை: கலைஞர் உறுதி

மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் இதற்கு அனுகூலமான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊனமுற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்: புகார்கள் குறித்து இயக்குநர் பதிலளிக்க உத்தரவு


மதுரை, பிப். 24: மத்திய அரசின் ஊனமுற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தத் தடை கோரிய மனுவுக்கு, ஊனமுற்றோர் நல்வாழ்வுத் துறை இயக்குநர் 6 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனு:

21.01.2010 பாராட்டு விழாவில் தமிழக முதல்வரின் உரை

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.
 மாற்றுத் திறனாளர்களால் உருவாக்கப்பட்ட 'மா' திரைப்படம்
மனிதர்களுக்கு எப்பவுமே கலையின் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் பிறவியிலோ, விபத்திலோ மனிதர்களின் இயல்பு நிலையிலிருந்து மாறியவர்களான மாற்றுத் திறனாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடம் புதைந்துள்ள கலைத் தாகத்தைக் கண்டு அறிந்து, அவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து, அவர்களின் மூலம் உருவாக்கப்பட்ட 'மா' திரைப்படத்தை தனது முதல் திரைப்படமாக தயாரித்திருக்கிறது 'கலைவிழி'.