இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

திரு.சுப.வீரபாண்டியன் ஐயா அவர்களின் உரை

                      மார்ச் 1 ஆம் தேதி காலை, கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். பேசி முடிந்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. “இன்றைக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறாய் . உன் பேச்சு என் மனதைத் தொட்டது. உடல் ஊனமுற்ற அந்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்கிறேன்” என்று அவர் சொன்னபோது வியப்பிலிருந்து விடுபட எனக்கு ஒரு நிமிடமாயிற்று.

2010 - 2011 ஆம் ஆண்டுக்கான தமிழக வரவு செலவு திட்டத்தில் மாற்றுத் திறனாளர் களுக்கான அம்சங்கள்

தமிழக அரசின் வலைத் தலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு குறிப்பிட்ட பகுதி மட்டும் இங்கே வழங்கப்படிருகின்றது.

மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

வாசகர்களின் கருத்திற்கு இணங்க இந்த பதிவு திரும்ப பெறப்படுகிறது. நன்றி.

பெரியார் EVR கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்


 
 
அமைப்பாளர்களாகிய திருமதி.புவனேஸ்வரி, திருமதி.அங்கம்மாள், திரு.ராஜேந்திரன்  ஆகிய பேராசிரியர்கள் இந்த விழிப்புணர்வு முகாமிற்கு முன்னின்று ஏற்பாடு செய்தனர். 

இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியை திருமதி.புவனேஸ்வரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் திருமதி.ஜெசிந்த  அவர்கள் துவக்கவுரையற்றினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.மாரிக்கண்ணன் அவர்கள் அரசினால் மாற்றுத்திறனுடையோர்க்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார், 

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் பொருளாளர் திரு.வெங்கட்ராமன் மாற்றுத்திறனுடையோர் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றிக்கான தீர்வுகளும் பற்றி உரையாடினார். 

வழக்கறிஞர் திரு.வின்சென்ட் அவர்கள் தகவலறியும் உரிமை சட்டம் பற்றியும் அதனை பயன்படுத்தும் விதம் பற்றியும் அந்த சட்டம் குறித்த  தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

வழக்கறிஞர் திரு.மார்டின் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்கான இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் 2007 ம் ஆண்டில் ஐ.நா சபை அறிவித்த பிரகடணம் ஆகியவை பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த முகாமில் இதே கல்லூரியில் பயிலும் 36 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




கடந்த 4ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்!

 
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

எனது மனம் கவர்ந்த கவிதைகள்

கனவு வாழ்க்கை போதுமெனக்கு...

கண் பார்வையிழந்து
கடந்தன இருபது ஆண்டுகள்
என்றாலும்
என் பாட்டியை ஒருநாள் இரவு பார்த்தேன்
நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்தவள்!
அதே முகம், அஹ்டே கனிவு
அதே சிவந்த நிறம்‍ மறுநாள்
எனக்குள் கொள்ளை மகிழ்ச்சி.

இன்னொரு நாள் கனவில்...
இருபதாண்டுகளுக்குமுன் மருத்துவமனையில்
என்னைச் சேர்த்தபொழுது கண்ணீர்விட்ட
என் தந்தை வந்தார்.
இறுக்கமான மனிதருக்குள் எத்தனை அன்பு

எனக்குள் இன்னும்
மிச்சமிருக்கிறது அவர் ஆளுமை
அவரின் தந்தைபேறு
என் தவம்
இன்னொரு நாள் கனவில் என் தாய்...
என்னோடு சேர்த்து
எட்டுக்குழந்தைகளை ஆளாக்கியவர்.
எத்தனை வதைகள்,எத்தனை வேதனைகள்
எல்லாமே நான் பார்க்க அனுபவித்தவை
அருகில் வைத்து தடவிக்கொடுத்தார் என்னை
கண்ணீர் விட்டேன் கனவிலும்...

எனக்குள் உயிர்ப்பாய்
இன்றும் இவர்கள்
கனவுக் காட்சிகள் போதும்
எனக்கு...
கவிஞர் கோவை ஞானி


புதிய கண்ணகி

அரசின்
கருணைத் தொகைக்காக‌
அலையாயலைந்தாள்
அந்த விதவை

கையெழுத்துக்கள்
பல வாங்கிக் கொடுத்தாள்

கடைசியில்
அந்தப் பணமும் வந்தது
பணத்தை கொடுத்த‌
அலுவலர் கை நீட்டினார்...

நீயும்
விதவை தானா?
அவன் முகத்தில்
விசிறியடித்தாள்
பணத்தை...
கவிஞர் கர்ணன்
மதுரை.


திருநங்கை

ஆண்பாலிலும் அகப்படவில்லை
பெண்பாலிலும் பொருத்தமில்லை
அரவாணி என ஆகிவிட்டதால்
அரவணைக்கக் கூட யாருமில்லை

விலங்கு, பறவை
தாவரம் மனிதரென‌
அனைத்தும் அடையாளப்
பெயர் பெற்று அடைகின்றது கௌரவமே!
நாங்கள் மட்டும்
அடையாளம் காணாத‌
ஆச்சர்யக் குறியானோம்

அவலமே கண்டு கண்டு
அவனியிலே நொந்துவிட்டோம்
மனிதனையே மதிக்காத சமூகம்
மனிதனாகவே எண் ணாதவரையா மதிக்கும்?

குரோமோசோமின் குறும்பதுவால்
குழப்பமே வாழ்வானது
குனியக் குட்டும் சமுதாயத்தில்
மனமும் கூட தாழ்வானது

விதியை மீறிய விளையாட்டை
இயற்கை எப்படி ஈடுசெய்யும்?
விளக்க முடியா பதிலுக்கு
வினாக்குறியே விடையாகும்.

கவிஞர் இரா.சுமதி
தேனி


நம்பிக்கை

வீழ்வது பற்றி
ஒருபோதும்
எங்களுக்கு
கவலையில்லை
எழுவது உறுதி
என்பதால்...

கவிஞர் சே. ஜெயக்குமார்
சென்னை


பிரசவ வேதனை

ஆண்டவனே
பிரசவ வேதனையை
பெண்களுக்கு மட்டும் ஏன் கொடுத்தாய்?

அக்னி சாட்சியாக‌
இன்ப துன்பங்களை
பகிர்ந்து வாழ்கிறோம் என்று
சங்கல்பம் கொண்டதை
நீயே பொய்த்து விட்டாயே?

அன்பின் வெளிப்பாட்டில்
ஒரு அராஜகமா?
ஆசை முத்தத்திற்கு
ஆயுள் தண்டனையா?

இறைவா
சிசுவை வெளிகொணர‌
அகிம்சை வழிகளை சிருஷ்டிக்க‌
ஏன் மறந்தாய்?

அடுத்த ஜென்மத்தில்
என்னை பெண்ணாகவும்
அவளை எனக்குரிய ஆணாகவும்
படைப்பாய் ஆணடவனே!

அவளிடம்
இதனை சொல்லிவிடாதே
அவள் என்ன சொல்வாள் என்று
நான் கூறவும் வேண்டுமா?

கவிஞர் வெ. எழிலரசன்
சேலம்


நீயும் ஆண்டவன் தான்...

சுழி போட்டு
செயல் தொடங்கும்
விநாயகப் பெருமான்
முழுமுகம் இல்லாதவன்

ஜாதகத்தில்
உச்சத்தில் நன்மையாம்
குரு தட்சிணாமூர்த்தி
ஒரு கால் இல்லாதவன்

சகல் காரியமும்
நடக்க வைக்கும்
சண்டீகேசுவரன்
இரு காது கேட்காதவன்

ஒரு
அவதாரத்தில்
அம்மன் கூட‌
விகாரமானவள்

அட விடுங்கள்
அகிலத்தையே
ஆட்சி நடத்துவதாய் கூறும்
சிவன் கூட‌
அர்த்தநாரீஸ்வரர்

ஊனமானவனே!
உரக்கச் சொல்கிறேன்
நீயும் ஆண்டவன் தான்
உயர்ந்த இடத்தில் இருப்பதால்...

அரசு ஆணைப்படி
நீ மாற்றுத்திறானுடையவன் மாற்றானை விட நீ திறமையானவன்

பிறகெதற்கு
ஊனத்தை பற்றி
ஒப்பாரி வைக்கிறாய்
நன்றாக
உழைத்து எரி
உன் தீபத்தில்
உலகம் ஒளி பெறட்டும்

கவிஞர் கவி.பெரியசாமி
கரூர்



கல்விக்கண் காமராஜர்

இன்று விலைபோகும் கல்வியை
அன்றே இலைபோட்டு பரிமாறியவர்
ஜாதிமத வேறுபாடின்றி
வீதிதோறும் கல்வியை விதைத்தவர்!

கனவுகளோடு பள்ளி வந்த‌
சின்னஞ் சிறார்க்கும்
உணவளித்த மூத்தவர்!
விளையாட்டுப் பிள்ளைகளையும்
நல்ல சிலையாக வடிக்கும்
கல்வியெனும் கலையறிந்த கலைஞர்!

ஆடுமேய்த்தவன் கையிலும்
ஏடுகொடுத்த சித்தர்!
சாணம் சுமந்த சிறுவனுக்கும்
ஞானம் போதித்த புத்தர்!

தமிழகத்து பட்டதாரிகளுக்கெல்லாம்
சுயவேலை திட்டம் கொடுத்து
வரலாறு படைத்தவர்!

அறியாமையை தன்
அறிவாலே உடைத்தவர்!

மாட மாளிகைகள் கட்டாமல்
பாட சாலைகள் கட்டிய‌
முதல்வர்!
ஒவ்வொரு தமிழ் வீட்டிற்கும்
தத்துப் புதல்வர்!

மாக்களாக இருந்தவர்களை
மக்களாக மாற்றிய மனிதர்!
நகரமாக இருந்த சமூகத்தை
சிகரமாக மாற்றிய புனிதர்!

படிக்காத மேதையே!
உன்னை படிக்காத மேதை
எவரெம்று சொல்!
உன் பெயர் தான்
மனங்கள் என்றும்
உச்சரிக்கும் சொல்...!

கவிஞர்.துளிர்
மதுரை

முதல்வரின் அறிக்கை


ஊனமுற்றோருக்கான பெரிய திட்டத்தை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுப்போம்: கருணாநிதி

திருச்சி, மார்ச்.4-திருச்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில், மாற்றுத் திறனாளிகளின் நன்மைக்காக ஐ.நா. மன்றத்திலே எல்லா நாடுகளும் ஒத்துக் கொண்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியா முழுமையும் உள்ள ஊனமுற்றோருக்கு- அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்பந்தப்படி வசதி வாய்ப்புகள், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனவா என்றால் இல்லை. நான் அதைப்பற்றி இந்த ஆண்டு நம்முடைய நிதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட விருக்கின்ற நிதி நிலை அறிக்கையில் - மத்திய அரசு அன்றைக்கு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றி -இந்தியாவிலே இருக்கின்ற ஊனமுற்றோருக்கெல்லாம் நன்மைகளைச் செய்ய வேண்டும், உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக இருக்கிறோம். தமிழ்நாடு அரசும் சேர்ந்து தான் இந்திய அரசோடு ஒத்துழைத்து அந்த இயலாதவர்களுக்கு மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படுகின்ற காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற முறையில் தான் அதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இப்போது ஏழையெளியோருக்கு குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விட பெரிய திட்டம், இந்தத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கும்போதே, அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வர இந்த அரசு ஆவன செய்யும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

நன்றி: மாலைமலர்
http://www.maalaimalar.com/2010/03/04040203/political.html

மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமையை நிலை நாட்டுவோம்: கருணாநிதி உறுதி

மாற்றுத் திறன் படைத்தோருக்கு அரசு சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு எனவும், தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும்

மாற்றுதிறன்

மாற்றுதிறன் மக்களின் மனதிடத்தினை வளுப்படுத்துவதர்க்காகவும் ஊனதைப்பற்றிய விழிப்புணர்வு பெறுவருவதர்க்கவும் இங்கே ஒருசில வீடியோ படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மற்ற அமைப்புகள் மூலமும் நண்பர்கள் மூலமும் பெறப்பட்டுள்ளன. இதனைப்போன்ற வீடியோக்கள் தங்கள் வசம் இருந்தால் மற்ற மாற்றுதிறன் மக்களின் நன்மை கருதி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.



ஊனமுற்றோருக்கான உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை: கலைஞர் உறுதி

மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் இதற்கு அனுகூலமான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,