இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்

            ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  
         2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.

ஐஏஎஸ் தேர்வு : மாற்றுத்திறன் படைத்த 30 பேர் தேர்ச்சி

2009ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் பணிகள் முக்கிய தேர்வு முடிவுகள் வியாழக் கிழமையன்று வெளியிடப்பட்டன. இதில் முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையை சேர்ந்த 2 பேர் இடம் பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்களாவர். இந்த முடிவுகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு :

இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் 4,09,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,93,091 பேர் முதல் கட்டத் தேர்வு எழுதினர். இதில் 12,026 பேர் முக்கிய எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.