இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகம் வழங்கும் விழா

                திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாக நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.
    
                இந்த வருடத்திற்கான விழாவினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்துடன்  நேயம் அறக்கட்டளையும் இணைந்து மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் இலவச சீறுடை வழங்கும் விழாவினையும் சேர்த்து நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The temple has a history of being insensitive to the differently-abled.



Bangalore:  NDTV reported on a young boy who was denied entry to a temple near Mysore because he was in a wheelchair. Further investigations reveal that the same temple has a history of being insensitive to the differently-abled. This incident shocked many, but it was not an isolated case. NDTV spoke to N Mamatha, who was not allowed to enter the same temple in her wheelchair way back in 2005.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்புகள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையயத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:
கல்வித் தகுதி :  குறைந்தது 10 வகுப்பு தேர்ச்சி
வயது                 :  குறைந்தது 21 (01.07.2010 அன்று) அதிகபட்சம் 40வயது
ஊனத்தின் சதவீதம் : 40 முதல் 50க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணத்திலிருந்து முழு விலக்களிக்கப்படுகிறது. (வருமான உச்சவரம்பின்றி)

பகுதி - 14 - சட்டம் 1995 - அத்தியாயம் - 4

அத்தியாயம் - 4
ஊனங்கள் ஆரம்ப காலத்திலேயே அறியப்படல், மற்றும் தடுக்கப்படல் தக்க அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊனங்கள் ஏற்படுவதை தடுக்க சில நடவடிக்கைகள் எடுத்தல்

பிரிவு:25. ஊனங்கள் ஏற்படுவதை தடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு தக்க அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தன் பொருளாதார ஏற்றத்துக்கும், திறனுக்கும் ஏற்ப:-

அ. ஊனங்கள் ஏற்படுவதன் காரணங்கள் சம்பந்தமான ஆய்வு, புலனாய்வு மற்றும் கணக்கெடுத்தல் இவற்றை மேற்கொள்ளல், அல்லது மேற்கொள்ளப்பட காரணமாதல்.

பகுதி - 13 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3


மாநில செயற்குழு
பி.19.து.பி.1. இச்சட்டத்தின் கீழ் தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள மாநில செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை மாநில அரசு நிறுவ வேண்டும்.
து.பி.2. மாநில செயற்குழுவில் அடங்கி உள்ளவர்கள்:-

            அ. சமூக நலத்துறை செயலர் வகிக்கும் பதவியால் தலைவர்.

            ஆ. ஆணையர் வகிக்கும் பதவியால் உறுப்பினர்.

பகுதி - 12 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3

மாநில ஒருங்கிணைப்பு கூட்டங்கள்
பி.17. மாநில ஒருங்கிணைப்புக் குழு, 5 மாதங்களுக்கு ஒரு முறை கூட வகுத்துரைக்க உள்ளபடி தனது கூட்டங்களில் பணிகளை மேற்கொள்ளும்போது விதிகளை அனுசரிக்கும்.
மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணிகள் 
பி.18.து.பி.1. மாநில ஒருங்கிணைப்பு குழுவின் பணி யாதெனில் இச்சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டு, ஊனங்கள் பற்றிய விஷயங்களில் மாநில தலைமை மையமாக செயல்பட்டு ஊனமுற்ற நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க விரிவான கொள்கை தொடர்ந்து பரிணமிக்க ஆவன செய்தல்.

மாற்றுத்திறனாளர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து - தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை

பகுதி - 11 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3



உறுப்பினர்களின் சேவை விதிகள் வரைமுறைகள்:

              பி.14.து.பி.(1). இச்சட்டத்தின் கீழ் அல்லது இச்சட்டத்தால் வேறு வகையில் வழங்கப்பட்டாலன்றி விதி (ஊ) அல்லது விதி (ஏ) து.பி.2. பி.3யின்படி நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டது முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார்.  இந்நிலையில் அவரது பதவிக்காலம் முடிந்துவிடட போதிலும் தனக்குப் பின் வருபவர் பதவி ஏற்கும் வரை உறுப்பினர் தனது பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.

            து.பி.(2) வகிக்கும் பதவியால் உறுப்பினரின் பதவி தான் உறுப்பினராக நியமிக்கப்பட  காரணமான பதவியில் இல்லாமல் போனால் உறுப்பினர் பதவியும் முடிவுக்கு வந்துவிடும்.

பார்வையற்ற குழந்தைகளுக்கு உதவ ஒரு கருவி.

22 ஜீலை 2010ம் தேதிய புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை.

                 பார்வைத் திறனற்ற குழந்தைகள் பாதையில் ஒளி விளக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு கருவி.  பெயர் விழிவழங்கி.  இதனைக் கண்டுபிடித்திருப்பவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகக் கணிணிப் பேராசிரியை அமுதா. இதன் செயல்பாடுகளை அவரே விளக்குகிறார்.

சீர்கேடு எற்பட்டது யாரால்? - பார்வையற்றோர் சங்கம் நேத்தியடி

கடந்த 30.06.2010ம் தேதிய துக்ளக் இதழில் என்.முருகன் என்ற ஓய்வு பெற்ற அவசர ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய கால்புணர்ச்சி கட்டுரைக்கு பதிலடியாக கோவையைச் சேர்ந்த பார்வையற்றவர்களின் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகியன தக்க பதிலளித்துள்ளன.

             30.06.2010 தேதியிட்ட "துக்ளக்" இதழில், "நிர்வாகச் சீர்கேடுகள்" என்றும் தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.  அது குறித்து சில கருத்துக்களை முன்வைப்பது எங்கள்  கடமையெனக் கருதுகிறோம்.

Monthly meeting 04.07.2010


Trichy district differently abled association's monthly meeting held on Sunday. The district secretary of the association Marikkannan was preside the meeting. differently abled government employees association's state joint secretary subramaniyan was presence.



in this meeting following resolutions are taken, such as



1. Expose our thanks to railway minister Mamtha Banarji and Tamilnadu CM for implementing of special unreserved coaches in trains for differently abled.

2. Should take need ful action to give free note books for diffidently abled students in next week.

3.Condemn the Murugan I.A.S(rtd.) for his unlike statement in Thuklak magazine against the differently abled which makes wound the heart of differently abled.

District vice president Krishnasamy, differently abled government employees association's Bakyaraj, Organizer Devarajan, Executive membrs Mariyappan, Lakshmanan, Kannan, Subramani and members participated in this meeting.

மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு

             கடலூர்:சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத்திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.சிதம்பரம் பஸ் நிலையத்தில்,  10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், சிறுமியால் கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை என தெரிய வந்தது. 

பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை சிறப்பு முகாமில் அமைச்சர் பங்கேற்பு

               திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணச்சலுகை மற்றும் திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நிர்ணயித்த இலக்கை தாண்டியது மாற்றுத்திறனாளி பள்ளி சேர்க்கை

                  திருச்சி: ""தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துள்ளது,'' என்று கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக புள்ளவிபரம் தெரிவிக்கிறது.

                      அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5,109 பேர் இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், கிராம செவிலியர்கள், மறுவாழ்வுத்திட்ட அலுவலர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் 319 மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, எஸ்.எஸ்.ஏ., சார்பில் மொத்தம் 5,235 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை தொடரும் பணியில் மேலும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். மனநிலை பாதிக்கப்பட்ட மாணவரை, சாதாரண மாணவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க முடியாது. சிறப்புப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு

               நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

              பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

                   முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

வீட்டிலேயே கல்வி

                    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீட்டிற் கே சென்று சிறப்பாசிரியர்கள் கல்வி வழங்க வேண்டும்” என கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய கண்காணிப்பாளர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மாவட்டத்தில் ஆறு முதல் 14 வயதிற்கு உட் பட்ட பள்ளி செல்லா குழந் தைகள் அனைவரையும் கண்டறிந்து, ஒரு மாதத் திற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.