இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

போலியோ சொட்டு மருந்து!

தமிழகத்தில் வரும் ஜனவரி 10ஆ‌ம் தே‌தி மற்றும் பிப்ரவரி 7ஆ‌ம் தே‌திகளில், 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு உள்ளது.இ‌ந்‌தியா‌வி‌ல் போ‌லியோ நோ‌ய் தா‌க்குதலை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த, குழ‌ந்தைகளு‌க்கு சொ‌ட்டு மரு‌ந்து அ‌ளி‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌ம் நடைமுறை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ‌பிறகு, உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, உத்தராஞ்சல், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 5 வருடமாக ஒரு குழந்தை கூட இந்நோயால் பாதிக்கப்படவில்லை.போலியோ இல்லாத நிலையை தக்க வைத்துக்கொள்ள ஆண்டுதோறும் முகாம்கள் நடத்தப்பட்டு

உடல் ஊனமுற்றோருக்கான ஏ.டி.எம்

உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் வகையிலான தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தை (ஏ.டி.எம்) பஞ்சாப் நேஷனல் வங்கி அமைத்துள்ளது. இந்த ஏ.டி.எம் புது டெல்லியில் சர்வதே உடல் ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஆக்சன் பார் எபிலிட்டி டெவலப்மென்ட் அண்ட் இன்குலூசன் அமைப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேர்மனும்- மேலாண்மை இயக்குநருமான கே.ஆர்.காமத் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் காமத் பேசுகையில், நிறுவனங்களின் சமுதாய பொறுப்புணர்ச்சியின் ஒரு அங்கமாக, இந்த உடல் ஊனமுற்றோர் எளிதில் இயக்கும் ஏ.டி.எம் அமைத்துள்ளோம். இது மாதிரியான அதிக ஏ.டி.எம்களை இனி வருடம் வருடங்களில் நிறுவப்படும் என்று கூறினார். ஆனல் எத்தனை ஏ.டி.எம் இயந்திரங்கள் நிறுவப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. பயோமெட்ரிக் ஏ.டி.எம் என்று அழைக்கப்படும் இவற்றில் டெபிட் கார்களை பயன்படுத்தலாம். டெபிட் கார்டின் உரிமையாளர் சங்கேத எண்ணை அழுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக விரல் ரேகை, கண்ணின் கருவிழி, முகம் ஆகியவற்றை அடையாளமாக பயன்படுத்தாலாம். இதனால் கண்பார்வை இல்லாதவர்கள் உட்பட உடல் ஊனமுற்றோர் ஏ.டி.எம் இயந்திரத்தை யாருடைய உதவியும் இல்லாமல் பயன்படுத்தம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றி:வெப்துனியா
http://tamil.webdunia.com/newsworld/finance/news/0912/04/1091204078_1.htm

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 3

உலக ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3 ஆம் தேதியினை திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சாங்கம், இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இன்னும் பல மாற்றுத்திறனுடையோர் சார்ந்த சங்கங்கள் இணைந்து திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் எதிரில் காதிக்ராப்ட் மைதானத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியா சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் ஆனபின்பும்

ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.இது தொடர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உடல் ஊனமுற்றோர் நம்முடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு இருக்கின்ற குறைகளை ஒவ்வொருவரும் தீர்க்கப் பாடுபட வேண்டும். அதற்காகவே டிசம்பர் 3ஆம் நாள் உலக ஊனமுற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.தே.மு.தி.க இதை உணர்ந்து அவர்களுக்கென உடல் ஊனமுற்றோர் நல அணி உருவாக்கியதோடு, கடந்த 27 ஆண்டுகளாக எனது பிறந்தநாளில் உடல் ஊனமுற்றோர்களுக்கு நலஉதவிகளைச் செய்து வருகிறேன். தமிழக அரசு ஊனமுற்றோருக்கு வாரியம் அமைத்தது. ஆனால் ஊனமுற்றோருக்கு முறையான சலுகைகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் ரூ.500 உதவி வழங்குவதாக

வீடியோ

கூட்டு முயற்சி

இலவச ஜெய்ப்பூர் ஃபுட் வழங்கும் முகாம்

இந்த முகாமில் அனைத்து மாற்றுத்திறனுடையோரும் கலந்துகொண்டு பயனடையுமாறு நமது திருச்சிராப்பள்ளி உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இந்த படங்களில் இருப்பதை அப்படியே படிக்க முடியவில்லையானால் அந்த படத்தை ஒரு முறை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) உடனே அந்த படம் ஒரு முழு பக்கத்திற்கு மாறும் இப்பொழுது அந்த படம் எளிதாக படிக்கும் அளவிற்கு இருக்கும் அதனை உங்களது கணிணிக்கும் பதிவிறக்கம் (download) செய்துகொள்ளலாம்.
அரும்பு மாத இதழில் வெளியான நமது சங்க தலைவரின் வாழ்க்கை குறிப்பு உங்களின் பார்வைக்கு முகப்பு அட்டை

சுயம்வரம்

ஒருசில ஊனமுற்றோர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. அதனைப்போக்கும் விதமாகவும், ஊனமுற்றோர் வாழ்வில் திருமணம் என்பது கட்டாயமாக நடைபெறவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு

நண்பர்களுக்கு அழைப்பு

நண்பர்களே இது நம்மைப்போன்ற ஒரு உடல் ஊனமுற்ற நபர் புரிந்த சாதனைகளை விளக்கவும் அது நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்கதியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கே பதிவுசெய்கின்றேன்.
சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பதென்பது இன்றிய நிலையில் ஒரு குதிரைக்கொம்பான விசையமாகத்தான் நம் நாட்டில் இருந்து வருகிறது. அதுவும் கதாநாயகன் என்றால் சொல்லவே தேவையில்லை, வாய்ப்புக் கிடைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கே

மாபெரும் ஆர்பாட்டம்

தமிழகத்தில் பதினாறு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர்கள் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களில் பெரும்பான்மையோர் சமூகம், பொருளாதாரம், இடபெயர்ச்சிபோன்றவற்றில் பின்தங்கிய நிலையிலும், அனைத்து நிலையிலும் மற்ற சாதாரண மக்களுடன் போட்டி போட முடியாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையில் வாழ்ந்துவருகின்றனர் என்பது அனைத்து தரப்பினரும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு உண்மை.
மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் ரயில்வே துறையில் மாற்றுத்திறனுடையவர்கள் எளிதில் பயணம் செய்ய அவர்களுக்கென்று தனியாக எட்டு பேர் மட்டுமே அமரக்கூடிய

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க நிர்வாகிகள்

தலைவர் திரு. R. முருகானந்தம், செல் பேசி : 9442648191, 9345108191
செயலாளர் திரு. P. மாரிக்கண்ணன், செல் பேசி : 9865075501பொருளாளர் திரு. M. வெங்கட்ராமன், செல் பேசி : 9944459809



ரயில்வே நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு


கடந்த 28.08.2009 அன்று ஊனமுற்றோர் சங்கங்களின் சார்பில் சென்னையில் ஊனமுற்றோர்க்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று மட்டும் குறைந்தபட்சம் 2000 ஊனமுற்றவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்து முகாமில் கலந்துகொண்டனர்.
அந்த வேலைவாய்ப்பு முகாமில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து நானும் சென்றிருந்தேன்முகாமினை முடித்துக்கொண்டு மீண்டும்

24.08.2009 தேதிய செய்தி நறுக்கு - தினமலர் நாளிதழ்

இந்த செய்தி நறுக்கினை படித்து உங்களின் கருத்தினை கண்டிப்பாக கூறவும். நன்றி.

ரயில்வே துறையினரின் செயலை கண்டித்து 01/09/2009 அன்று போராட்டம்

வரும் 01/09/2009 அன்று ஊனமுற்றோர்க்கு எதிராக செயல்படும் ரயில்வே துறையினரின் செயல்களை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தபோவதாக ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் அறிவித்துள்ளது.
இன்றைய நிலைமையில் நாம் நமது உரிமைகளை போராடித்தான் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் வரும் 01/09/2009 அன்றைய போராட்டத்தினை அறவழியிலும், சட்டத்தின் அனுமதியுடனும் நடத்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோர் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமாய் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் அன்புடன் அழைக்கிறது

மாற்றுத்திறனுடையோரை பற்றிய மற்ற இணையதள இணைப்புகள் கீழே கொடுக்கபட்டுள்ளன.

http://discuss.itacumens.com/index.php/topic,77201.0.html

http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=15513

http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=14802

http://search.webdunia.com/search.aspx?q=%u0B8A%u0BA9%u0BAE%u0BC1%u0BB1%u0BCD%u0BB1%u0BCB%u0BB0%u0BCD&num=10&w=true&lid=TM&cp=1&st=web

http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=15937

http://www.viparam.com/2/3/16431.html

http://friendlyfiretamil.wordpress.com/2007/07/09/லலித்குமார்/

மேற்கண்ட இணையதள இணைப்புகள் மாற்றுத்திறனுடையோரின் பார்வைக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட இணைப்புகளில் உள்ள கருத்துகளுக்கு எந்த விதத்திலும் எங்களது இந்த ப்லொக்ச்பொட் பொறுப்பாகாது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

நமது சங்கத்தின் அலுவலகம்

1991 முதல் மாற்றுத்திறனுடையோர்க்காக பாடுபட்டு வரும் நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கம் கடந்த ௨007 முதல் அரசில் முறையாக பதிவுபெற்ற சங்கமாக, (பதிவு எண்:151/2007) சங்கத்தின் வரவுசெலவு கணக்குகளை முறையாக அரசிற்கு சமர்ப்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இதுநாள்வரை சங்கம் செயல்பட தனியாக ஓர் அலுவலகம் இல்லை. ஆகையால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோரின் முயற்சியால் நமது சங்கத்திற்க்காக அலுவலகம் எண்:52 மாஸ் காம்ப்லெக்ஸ், கடை எண்:3 சிந்தாமணி பஜார், அண்ணா சிலை அருகில், திருச்சி-2. என்ற முகவரியில் விரைவில் செயல்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோர்களும் இணைந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ரயில்வேயில் மற்றுத்திறனுடையோர்க்கு முன்பதிவின்மூலமே பயணம் செய்ய முடியுமா?

தினகரன் நாளிதழில் 19/08/2009 அன்று வெளியான செய்தி நறுக்கு
- நன்றி தினகரன் -

63 வது சுதந்திரதின விழா


சுதந்திர இந்தியாவின் 63வது சுதந்திரதின விழா திருச்சியில் இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் சார்பில் 63 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அருட்திரு லூர்து ராஜ் அடிகள் மற்றும் திருச்சி மாவட்ட அரசு வழக்கறிஞர் திரு கிள்ளிவளவன் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினர், தொழிலதிபர் திரு. பெருமாள் முன்னிலை வகித்தார். பார்வையற்றோர் சங்க தலைவர் திரு. கணேசன் அனைவரையும் வரவேற்றார். பார்வையற்றோர் சங்க பொதுச்செயலாளர் திரு.மணியன் அறிமுகவுரையற்றினர். வழக்கறிஞர் திரு. ஜவகர், உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் திரு. முருகானந்தம், உடல் ஊனமுற்றோர் சங்க பொருளாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் திரு.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயற்குழு உறுப்பினர் திரு.துரை விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாட்டினை மருத்துவர் சுந்தர், பார்வையற்றோர் சங்கத்தை சார்ந்த செயலாளர் திரு.ராஜா, பொருளாளர் திரு.வெங்கடேசன், துணைத்தலைவர் திரு.மாணிக்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு.பாக்கியராஜ், திரு.லெனின், திரு.பாண்டியன் மற்றும் திரு.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் சார்பில் தலைவர் திரு. முருகானந்தம், செயலாளர் திரு. மாரிக்கண்ணன், பொருளாளர் திரு. வெங்கட்ராமன் மற்றும் சங்கத்தின் காப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உப்பிலியபுரம் அறிமுக கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் முதல் ஊராட்சி ஒன்றிய அறிமுகக் கூட்டம் உப்பிலியபுரத்தில் உள்ள R.C. நடுநிலைப் பள்ளியில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு விவரங்களை கேட்டறிந்தனர். இக்கூட்டத்திற்கு R.C. நடு நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அவர்கள் தலைமை தாங்கினர். திருச்சிராப்பள்ளி மண்டல தலைவர் திரு. சையது முஸ்தபா அவர்கள் விளக்கவுரையற்றினர். திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைவர் திரு. முருகானந்தம் செயலாளர் திரு. மாரிக்கண்ணன் பொருளாளர் திரு. வெங்கட்ராமன் சங்க காப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும்

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயல்பாடுகளின் அடுத்த முயற்சியாக மாற்றுதிறனுடையோருக்கு பெரிதும் உதவும் வகையிலும், அவர்களுக்கு வசதியாகவும், அவர்களின் வேலை பளுவை அதிகரிக்காத வகையிலும் அவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதிக்கே சென்று அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நல திட்டங்களை எடுத்துரைக்கவும் உரியவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உதவுவதற்கும் மேலும் அவர்களின் குறைகளை கேட்டு உதவுவதற்கும் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனை நிறைவேற்றிடும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்களை அமைப்பது எனவும் அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமிப்பது எனவும் முடிவு

01/07/2009 உண்ணாவிரதத்தின் சாதனைகள்

01/07/2009 அன்று சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் விளைவாக நமது தமிழக அரசாங்கம் ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றின் விவரங்களை சென்னை ஊனமுற்றோர் கூட்டமைப்பு அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அதன் நகல் உங்களின் பார்வைக்கு.

செய்தி நறுக்கு


தினமலர் நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தி நறுக்கு

உயர்கல்வி கற்கும் ஊனமுற்றோர்க்கு முழுமையான கட்டண விளக்கு அளிக்கும் அரசாணை







ஊனமுற்றோர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று சதவிகித பணிஇடங்களில் ஊனமுற்றோர் நியமனம் செய்யபடுவதை கண்காணிக்க உயர்மட்டகுழு அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை







தொழில் பயிற்சி நிறுவனதிர்க்கான அரசாணை




பர்வையற்றவர்க்கு வழங்கப்படுவது போலவே அனைத்துவகை ஊனமுற்றவர்களுக்கும் வேலை வைப்பற்றோர் நிவரனத்தொகை வழங்குவதற்கான அரசாணை




பரத பிரதமரின் சுயவேளைவய்ப்புத்திட்டத்தில் ஐந்து சதவித பங்குத்தொகையை அரசே ஏற்றுக்கொல்வதர்க்கான அரசாணை




தனியார் தொழில்சாலைகளில் ஊனமுற்றோர்க்கு சலுகைக்கான அரசாணை




சட்ட கல்லுரிகளில் கட்டண சலுகைக்கான அரசாணை



திருச்சி மேயருடன் சந்திப்பு




திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் சார்பில் புதிதாக பதவி ஏற்றுள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மதிப்பிற்குரிய மேயர் திருமதி. சுஜாதா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு செயலாளர் மரிக்கண்ணன் அவர்கள் தலைமையில் முருகானந்தம், வெங்கட்ராமன், காமராஜ், கண்ணன் மற்றும் சுபத்ரா ஆகியோர் மதிப்பிற்குரிய மேயர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மேலும் ஊனமுற்றோர்க்கு சுய தொழில் புரியும் வகையில் மாநகராட்சிக்கு வுட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளை வழங்கக்கோரியும், சங்கத்திற்கு குறைந்த வாடகையில் இடம் வழங்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது. தாயுள்ளம் கொண்ட மதிப்பிற்குரிய மேயர் அவர்கள் எமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்கள்.

விழாவில் கலந்துகொண்டவர்களின் படங்கள் - 2
















விழாவில் கலந்துகொண்டவர்களின் படங்கள் - 1