இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

01/07/2009 உண்ணாவிரதத்தின் சாதனைகள்

01/07/2009 அன்று சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் விளைவாக நமது தமிழக அரசாங்கம் ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றின் விவரங்களை சென்னை ஊனமுற்றோர் கூட்டமைப்பு அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அதன் நகல் உங்களின் பார்வைக்கு.

No comments:

Post a Comment