இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இனி நாம் இரயில் பெட்டியில் முன்பதிவின்றி பயணம் செய்யலாம்.

             கடந்த 30.06.2009 வரை மாற்றுத்திறனுடையோராகிய நாம் இரயிலில் பயணம் செய்ய எட்டுபேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இணைக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் சாதாரண பயணச்சீட்டுடன் பயணம் செய்யும் வசதியிருந்தது.

             ஆனால் 01.07.2009 முதல் அந்த சிறப்புப் பெட்டி முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டது. அதில் மாற்றுத்திறனுடையோர் முன்பதிவு செய்தே பயணம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அரியாமை

துக்ளக் வார இதழ் (30-06-2010) செய்தி:

             தற்போது, தமிழக முதல்வர் திடீரென்று எப்போதும் இல்லாத அளவிற்கு,  உடல் உறுப்புகளில் குறையுள்ளவர்கள்பால் அதிக அக்கரை எடுத்து, அவர்களை "மாற்றுத்திறனாளிகள்" என வகைப்படுத்தி, அவர்களுக்கென்று தனி துறையை ஏற்படுத்தி, பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.

            1975-ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு வேலை வாய்ப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்னுரிமை அளித்து, அரசு வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நடைமுறை உண்டு.  இவர்களில் பலரும் அரசு வேலையில் சேர்ந்த பின்னர், ஒழுஙிகீனங்களில் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை - நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

மாற்றுத்திறனுடையோர்கு புற்றுநோய்?


                       நான் 1991ம் ஆண்டு எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இடதுகாலை முழுமையாக இழந்தவன்.  இன்று புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்து கடின முயற்சிக்குப்பிறகு புற்றுநோயின் கோடுமையினை மறந்து (ஆம் அதனைக் கொடுமையென்றே கூற வேண்டும்.

பகுதி - 10 - சட்டம் 1995 - அத்தியாயம் - 3

அத்தியாயம் - 3.

மாநில ஒருந்கிணைப்பு குழு : - 
             பி.(13). து.பி.(1) ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பாணை மூலம் மாநில ஒருங்கிணைப்பு குழு  என ஒரு அமைப்பை நிறுவி இச்சட்டத்தின் கீழ் அதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

பகுதி - 9 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

மத்திய செயற்குழு

து.பி (1) 
              மத்திய செயற்குழு என அறியப்படும் ஒரு குழுவை, மத்திய அரசு நியமித்து இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள செய்ய வேண்டும்.

து.பி (2)        மத்திய செயற்குழுவில் இடம் பெறுபவர்கள் : -

             அ. இந்திய அரசின் நல்வாழ்வு அமைச்சகத்தின் செயலர், வகிக்கும் பதவியால் தலைவர்.

பகுதி - 8 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகல்

6. மத்திய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஒருவர், பிரிவு ஐந்தில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தகுதியிழப்பிற்கு ஆட்பட்டால் அவரது பதவி காலியாகிவிடும்
மத்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்

7. மத்திய ஒருங்கிணைப்பு குழு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி மத்திய அரசு வகுத்துள்ளபடி, தனது கூட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக செயல்முறை ளவிதிகளை பின்பற்ற வேண்டும்.

பகுதி - 7 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

அத்தியாயம் - 2
உறுப்பினர் பதவிக்காலம்

4.            1)  இச்சட்டத்தின் கீழ், அல்லது இச்சட்டத்தின்படி, டவேறு விதமாக அளிக்கப்பட்டாலன்றி, மத்திய ஒருங்கிணைப்பு குழுவிற்கு, பிரிவு மூன்று துணைப்பிரிவு இரண்டு உட்பிரிவு ஒன்று அல்லது எல் படி நியமிக்கப்படுவர்,  நியமனத் தேதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு பதவியை வகிப்பார்.

                அத்துடன் இவ்வுறுப்பினர், தம் பதவிக்காலம் முடிந்துவிட்ட டபோதிலும் தனது பின்வர் அப்பதவிக்கு வரும்வரை பதவியில் தொடர்ந்து இருக்கலாம்.

பகுதி - 6 - சட்டம் 1995 - அத்தியாயம் - 2

அத்தியாயம் - 2
மத்திய ஒருங்கிணைப்பு குழு

3.
                   1) மத்திய அரசு, அறிவிக்கையின் மூலம் "மத்திய ஒருங்கிணைப்பு குழு"  ஒரு அமைப்பை நிறுவி, இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பிரயோகிக்கவும், ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளவும், செய்யவும் வேண்டும்.

                  2) மத்திய ஒருங்கிணைப்பு குழுவிடம் இடம் பெறுபவர்கள்:-
                                        அ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வகிக்கும் பதவியால் தலைவர்.

                                        ஆ) மத்திய அரசில் நல்வாழ்வு துறைக்கு பொறுப்பு வகிக்கும் மாநில அமைச்சர், வகிக்கும் பதவியால் துணைத் தலைவர்,

பகுதி - 5 - சட்டம் 1995 - அத்தியாயம் - 1

(ஒ) "பணி அளிப்பவர்" என்பவர்
          (1)  அரசைப் பொறுத்த வரையில் துறைத் தலைவர் தன் சார்பாக நியமிக்கும் ஓர் அதிகாரி அல்லது இவ்வாறு எந்த அதிகாரியும் நியமிக்கப்படாத போது, தறைத் தலைவர்  மற்றும்,
  
            (2)  ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் முதன்மை நிர்வாக  அதிகாரி ஆவார்.

(ஓ) "நிறுவனம்" என்பது மத்திய பிராந்திய அல்லது மாநில சட்டத்தின் கீழ் அல்லது சட்டத்தால் நிறுவப்படும் ஒரு கழகம் அல்லது அரசோ, உள்ளாட்சி அமைப்போ நடத்தும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது உதவும் ஒரு அதிகார அமைப்பு அல்லது குழு அல்லது 1956 (1-1956) கம்பேனிகள் சட்டத்தின் கீழ் பிரிவு 617ன் படியான தன்னகத்தே அரசின் துறைகளை கொண்டுள்ள ஓர் அரசு கம்பெனி.

பகுதி - 4 - சட்டம் 1995 - அத்தியாயம் - 1

அத்தியாயம் - 1
பூர்வாங்கம்
சிறு தலைப்பு
அளவு மற்றும் ஆரம்பம்

1. 
1)  இச்சட்டம், ஊனமுற்ற நபர்களுக்கான (பராமரிப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழு பங்கேற்பு) சட்டம் 1995, என அழைக்கப்படுவதாக.

2) இந்தியா முழுமைக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இது விரியும்

3) மைய அரசு, அறிவிக்கையின் மூலம் நியமிக்கும் தேதியிலிருந்து இது அமுலக்கு வரும்.

இலக்கணங்கள்

2. 
 இச்சட்டத்தில், இடத்திற்கேற்ப வேறு வகையில் தேவைப்பட்டால் அன்றி  
(அ) "முறையான அரசு" என்பது

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 முதல் 14 முடிய) (பகுதி - 3)

5. கல்வி முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி முதலியன அளித்தல்.

முறையான அரசு மற்றும் உள்ளுர் அதிகார அமைப்புகள் முறைசாரா கல்விக்கான திட்டங்கள் ஏற்பாடுகள் செய்தல்.

புதிய உதவி உபகரணங்கள் கற்பிக்க உபகரணங்கள் வடிவமைத்து உருவாக்க ஆய்வுகள்.

மாநிலம் தழுவிய மாநாடு

  அர்ப்பணிப்பு உணர்வோடும், சேவை மனப்பாங்குடனும் அரசுப்பணியாற்றிவரும் ்மாற்றுத்திறனாளித் தோழர்களே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!

          மாற்றுத்திறனாளிகளாகிய நாம், நமது பணியினை பிறரைப்போலவே திறம்படவும், பிறரைவிடப் பொறுப்புணர்வுடனும் அனைத்து சூழ்நிலைகளிலும் செவ்வனே செய்து வருகின்றோம். இருப்பினும் நமக்கென அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை நாம் முழுமையாகப் பெறுவதில் உள்ள சிக்கல்களை, நாமே முயன்று தீர்த்துக்கொள்ளும்

சட்டம் 1995 (பொருளடக்கம் எண்:4 வரை) (பகுதி - 2)

பதிவு எண்:டி.எல்.33004/96
பிரத்தியோக இந்திய அரசிதழ்.

பகுதி - 2, பிரிவு - 1.

அதிகாரபூர்வ வெளியீடு ----------------
எண்:1, புதுடில்லி, திங்கள் ஜனவரி 1,1996
பவுசா - 11                         1917
தனி தொகுப்பாக வைக்கும பொருட்டு இப்பகுதிக்கு தனித்தனி பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

சட்டம் நீதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் (சட்டத்துறை)
1 ஜனவரி 1996 புதுடில்லி பவுசா - 11     1917(ச.க.)

மாற்றுத்திறன் அரசுப்பணியாளர் மாநில மாநாடு



அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில மாநாடு
19-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

திருச்சி, ஜீன் 17, அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தின் மாநில மாநாடு வருகிற 19ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சட்டம் 1995 (முன்னுரை)

வணக்கம்,

இந்தியாவில் மாற்றுத்திறனுடையோர்க்கான சட்டங்களை நாம் அறிந்துகொள்ளுவது மிகவும் பயனுள்ளதாகவும், அவசியமான ஒன்றாகவும் உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல்நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊனமுற்ற நபர்கள்  (சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1995, மசோதாவினை தங்களுக்கு இந்த வலைத்தலம் மூலம் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.  இம்மசோதா ஊனமுற்ற நபர்களின் (மாற்றுத்திறன் என்ற சொல் அப்போழுது வழக்கத்தில் இல்லாததாலும், அரசியல் சட்ட வார்த்தைகளை நமது விருப்பப்படி மாற்றுவது தவறானது என்பதாலும் இந்த இடுகை முழுக்க ஊனமுறு:றோர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படும் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்) உரிமைகளை பாதுகாத்து நல்வாழ்வு  அளிப்பதில் நெடுந்தூரம் செல்லும் என்பதை மசோதாவின் பொருளடக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

2010 - சூன் மாத மாதாந்திர கூட்டம்

நமது சங்கத்தின் சூன் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம் வழக்கமான இடமான திருச்சி, மரக்கடை சையது முர்துஷா பள்ளியில் காலை 10மணிக்கு நடைபெற்றது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் செயலாளர் - மாரிக்கண்ணன், பொருளாளர் - வெங்கட்ராமன், காப்பாளர் - பாலகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர் - சுப்பிரமணியன் மற்றும் சங்கத்தின் உறுப்பிளர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டத்திற்கு செயலாளர் - மாரிக்கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். 

கூட்டத்தின் முடிவில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) எதிர்வரும் சூலை மாதம் மாற்றுத்திறனாள மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் என நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டுபுத்தகங்கள் வழங்குவது,

டாஸ்மாக்-கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்கள் அமைப்பு மாநில கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் உடல் ஊனமுற்றோர் பணியாளர் நல்வாழ்வுச் சங்கத்தின் சார்பில் (இணைப்பு : தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு) 13.06.2010 அன்று சங்குருநாத மகாமுனிவர் சன்னதி, திருவாணைக்கோவில், திருச்சி என்ற இடத்தில் சங்க "சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்" நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.நாச்சியப்பன் தலைமையேற்றார். திரு. அரியக்குமார், மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்.  திரு.பூபதி, மாநில துணைத்தலைவர்,  தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.சையதுமுஸ்தபா, மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. மற்றும் திரு.புஷ்பராஜ், தென்மண்டல பொருளாளர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.மாரிக்கண்ணன், செயலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

திரு.பாரூக் - சிவகங்கை, திரு.முருகன் - மதுரை, திரு.பழனிச்சாமி - விழுப்புரம், திரு.கந்தகுமார் - திருநெல்வேலி, திரு.வேல்ச்சாமி - கடலூர், திரு. சண்முகம் - தூத்துக்குடி,  திரு. ஆறுமுகம் - திருச்சி திரு.எஸ்.சோமசுந்தரம் - கோவை ஆகியோர்

உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர். திரு. ஏகலைவன்

எதிர்வரும் உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர் திரு.ஏகலைவன் அவர்கள் பங்குபெற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் அழைக்கப்பட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளர்களால் நிர்வகிக்கப்படும் வலைப்பதிவுகள் குறித்து அவர் உறையாற்றவுள்ளார்.

அவருக்கு உதவிடும்பொருட்டு இதனை படிக்க வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளர்கள் நடத்திவரும் அனைத்து வலைப்பதிவுகளைப்பற்றியும் இதற்கு முந்தைய பதிவில் வழங்கப்பட்டுள்ள கவிஞர் திரு.ஏகலைவன் அவர்களுக்கு 23.06.2010க்கு முன்னர் தெரிவித்துதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விருதுகள் பல வெண்ற கவிஞர் திரு.ஏகலைவன்

சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர்,தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் (தன்னம்பிக்கைக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்) என்று தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார். 

தனது முதல் நூலான "பயணவழிப் பூக்கள்" கவிதைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 1)", "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 2)'', ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் போன்ற தொகுப்புகளின் வாயிலாக ஊனமுற்றோரின் சாதனைகளை புத்தகங்களாக்கி இருக்கிறார். "கல்விச் செல்வம்" என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள

இனி பேருந்திலும் பாதுகாவலருடன் பயணம் செய்யலாம்

மாற்றுத்திறனுடையோர் இரயில் பயணத்தின்போது எப்படி பாதுகாவலருடன் பயணம் செய்கின்றனரோ, அதனைப்போன்று இனி பேருந்திலும் பயணம் செய்யலாம் - என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. 

அந்த அறிவிப்பிற்கு தமிழக அரசு 30-05-2010 அன்றைய தேதியில் அரசாணை வழங்கியுள்ளது. 

அதன்படி ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்குட்பட்டு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் விருப்பம் போல பாதுகாவலருடனோ அல்லது தனித்தோ இனி பேருந்தில் பயணம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளர்கள் 38 பேருக்கு புத்தகம் கட்டுநர் பணி

பார்வையற்ற 38 மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் புத்தகம் கட்டுநர் பணியமர்த்தப்படும் என கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார் - செய்தி கலைஞர் தொலைக்காட்சி.

விரிவான செய்திகள் பின்னர்.

2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளிகளின் நிலை

தற்சமயம் 2011ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில் 2001ம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளர்களின் நிலை பற்றிய விவரங்கள் உங்களுக்காக விடுதலை வலைபதிப்பில் இருந்து.

சென்னை, மே 26-_ 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி நாட்டில் 64.8 சதவிகித-தினர் எழுத்தறிவு பெற்ற-வர்களாக உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்-சேரியின் எழுத்தறிவு வீதம் தேசிய சராசரியை-விட அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனுடையோர்,