இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர். திரு. ஏகலைவன்

எதிர்வரும் உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர் திரு.ஏகலைவன் அவர்கள் பங்குபெற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் அழைக்கப்பட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளர்களால் நிர்வகிக்கப்படும் வலைப்பதிவுகள் குறித்து அவர் உறையாற்றவுள்ளார்.

அவருக்கு உதவிடும்பொருட்டு இதனை படிக்க வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளர்கள் நடத்திவரும் அனைத்து வலைப்பதிவுகளைப்பற்றியும் இதற்கு முந்தைய பதிவில் வழங்கப்பட்டுள்ள கவிஞர் திரு.ஏகலைவன் அவர்களுக்கு 23.06.2010க்கு முன்னர் தெரிவித்துதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment