இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளிகளின் நிலை

தற்சமயம் 2011ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டுள்ள நிலையில் 2001ம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளர்களின் நிலை பற்றிய விவரங்கள் உங்களுக்காக விடுதலை வலைபதிப்பில் இருந்து.

சென்னை, மே 26-_ 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி நாட்டில் 64.8 சதவிகித-தினர் எழுத்தறிவு பெற்ற-வர்களாக உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்-சேரியின் எழுத்தறிவு வீதம் தேசிய சராசரியை-விட அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனுடையோர்,
மூத்த குடிமக்கள், மது, போதை மருந்துக்கு அடி-மையானவர்கள் ஆகி-யோரது மேம்பாட்டுக்-கான திட்டங்களை மத்-திய சமூகநீதி மற்றும் அதி-காரமயமாக்கல் துறை செயல்படுத்தி வருகிறது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்-பின்-படி நாட்டின் மொத்த மக்கள்தொகையான 102.90 கோடியில் தாழ்த்-தப்பட்டோர் 16.7 கோடி பேர் (16.2 சதவிகிதம்), மாற்றுத்திறனுடையோர் 2.19 கோடி பேர் (2.1 சதவிகிதம்), மூத்த குடி-மக்கள் 7.7 கோடி பேர் (7.48 சதவிகிதம்) உள்ளனர். 1931-ம் ஆண்டுக்கு பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. ஆனால் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்-டோர் எண்ணிக்கை 52 சதவிகிதம் என்று மண்டல் ஆணையம் தெரிவித்து உள்ளது. போதை மருந்துக்கு அடிமையானவர்கள் குறைந்தபட்சம் 1 சத-விகி-தம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.8 சத-விகிதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். தாழ்த்தப்பட்டவர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 54.7 சதவிகிதத்தினர், மாற்றுத்திறனுடையோரில் 49.3 சதவிகிதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள். தமிழ்நாட்டைப் பொறுத்-தவரை, 2001ஆ-ம் ஆண்டு மக்-கள் தொகை கணக்-கின்படி, மொத்த மக்கள் தொகை 6.21 கோடியா-கும். இதில் தாழ்த்தப்-பட்டோர் மற்றும் மாற்-றுத்திறனுடையோர் எண்ணிக்கை முறையே 1.19 கோடி மற்றும் 16 லட்சம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனுடை-யோரின் எண்ணிக்கை 19 சதவிகிதம் மற்றும் 2.6 சதவிகிதம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 73.5 சத-விகிதத்தினர் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திற-னு-டையோரில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 63.2 சதவிகிதம் மற்றும் 58.6 சதவிகிதம் ஆகும். தமிழ-கத்தில் எழுத்தறிவு பெற்றிருக்கும் தாழ்த்தப்-பட்-டோர், மாற்றுத்திறனு-டை-யோர் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment