இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

டிசம்பர்-3 2010 அன்று நடைபெற்ற ஊர்வலத்தைப்பற்றிய நாளிதல் செய்தி நறுக்குகள்

                  டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் மறுநாள் காலை செய்தி  தாள்களில்  பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்

டிசம்பர்-3 ஊர்வலத்தின் டீவி ஒளிபரப்பு

                டிசம்பர்-3 (இன்று) காலை நடைபெற்ற "விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தின்" டீவி நிகழ்ச்சி

டிசம்பர்-3 2010 அன்று
கிளாக் டீவியில் ஒளிபரப்பப்பட்டது
 

S.TV-யில் ஒளிபரப்பப்பட்டது

Ten TV-யில் ஒளிபரப்பப்பட்டது

 


டிசம்பர்-3 2010 அன்று மாலை செய்தி நறுக்குகள்

                      டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் அன்று  மாலை செய்தி  தாள்களில்  பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்

மாலை முரசு

மாலை மலர்

காவல்துறையின் கனிவு

                         இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தில் எனது மனதை பாதித்த ஒரு நிகழ்வினை இந்த பதிவின் மூலம் கூற கடமைப்பட்டுள்ளேன்.

                     மாற்றுத்திறனுடையோரின் உணர்வை மதித்து நமக்கு எந்த இடத்திலும் எந்தஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஊர்வலத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கிய திருச்சி கண்டோண்மெண்ட் காவல் நிலையத்திற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வது இந்த நேரத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். 

வழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்.

               டிசம்பர்-3 உலக ஊனமுற்றோர் (மாற்றுத்திறனுடையோர்) தினத்தினை முன்னிட்டு நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒரு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது.

                இவ்வூர்வலம் திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையம் முன்புள்ள காதிகிராப்ட் மைதானத்திலிருந்து அரிஸ்டோ வழியாக மிளகுபாறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெஸ்லி பள்ளி எதிரில் முடிக்க கிட்டமிடப்பட்டு காலை 10.30 மணிக்கு துவக்கி 11.30 மணிக்குள் திட்டமிடப்பட்டபடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.