இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

திருச்சி மேயருடன் சந்திப்பு




திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் சார்பில் புதிதாக பதவி ஏற்றுள்ள திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மதிப்பிற்குரிய மேயர் திருமதி. சுஜாதா அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு செயலாளர் மரிக்கண்ணன் அவர்கள் தலைமையில் முருகானந்தம், வெங்கட்ராமன், காமராஜ், கண்ணன் மற்றும் சுபத்ரா ஆகியோர் மதிப்பிற்குரிய மேயர் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். மேலும் ஊனமுற்றோர்க்கு சுய தொழில் புரியும் வகையில் மாநகராட்சிக்கு வுட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளை வழங்கக்கோரியும், சங்கத்திற்கு குறைந்த வாடகையில் இடம் வழங்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது. தாயுள்ளம் கொண்ட மதிப்பிற்குரிய மேயர் அவர்கள் எமது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்கள்.

No comments:

Post a Comment