இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

நமது சங்கத்தின் அலுவலகம்

1991 முதல் மாற்றுத்திறனுடையோர்க்காக பாடுபட்டு வரும் நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கம் கடந்த ௨007 முதல் அரசில் முறையாக பதிவுபெற்ற சங்கமாக, (பதிவு எண்:151/2007) சங்கத்தின் வரவுசெலவு கணக்குகளை முறையாக அரசிற்கு சமர்ப்பித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இதுநாள்வரை சங்கம் செயல்பட தனியாக ஓர் அலுவலகம் இல்லை. ஆகையால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோரின் முயற்சியால் நமது சங்கத்திற்க்காக அலுவலகம் எண்:52 மாஸ் காம்ப்லெக்ஸ், கடை எண்:3 சிந்தாமணி பஜார், அண்ணா சிலை அருகில், திருச்சி-2. என்ற முகவரியில் விரைவில் செயல்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதனால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோர்களும் இணைந்து பயன்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment