இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

உப்பிலியபுரம் அறிமுக கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தின் முதல் ஊராட்சி ஒன்றிய அறிமுகக் கூட்டம் உப்பிலியபுரத்தில் உள்ள R.C. நடுநிலைப் பள்ளியில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு விவரங்களை கேட்டறிந்தனர். இக்கூட்டத்திற்கு R.C. நடு நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அவர்கள் தலைமை தாங்கினர். திருச்சிராப்பள்ளி மண்டல தலைவர் திரு. சையது முஸ்தபா அவர்கள் விளக்கவுரையற்றினர். திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைவர் திரு. முருகானந்தம் செயலாளர் திரு. மாரிக்கண்ணன் பொருளாளர் திரு. வெங்கட்ராமன் சங்க காப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும்
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பொறுப்பாளர் திரு. ஆண்டி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனுடையோர்

No comments:

Post a Comment