இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ரயில்வே துறையினரின் செயலை கண்டித்து 01/09/2009 அன்று போராட்டம்

வரும் 01/09/2009 அன்று ஊனமுற்றோர்க்கு எதிராக செயல்படும் ரயில்வே துறையினரின் செயல்களை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தபோவதாக ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னையில் அறிவித்துள்ளது.
இன்றைய நிலைமையில் நாம் நமது உரிமைகளை போராடித்தான் பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் வரும் 01/09/2009 அன்றைய போராட்டத்தினை அறவழியிலும், சட்டத்தின் அனுமதியுடனும் நடத்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. எனவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனுடையோர் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமாய் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கம் அன்புடன் அழைக்கிறது

No comments:

Post a Comment