இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

வாங்க பழகலாம்

               நாம் அன்றாட வாழ்வில் பலவிதமான மாற்றுத்திறனாளர்களை சந்திக்கின்றோம். அவர்களில் காதுகேளாத மாற்றுத்திறனாளர்களிடம் மட்டும் பழகுவது சற்று கடினமாக இருக்கின்றது.  காரணம் நாம் என்ன சொல்கின்றோம் என்பதனை அவர்கள் விளங்கிக்கொள்ளுமாறு நம்மால் பேச இயலாதுபோகின்றது.  மேலும் அவர்கள் வாய் பேச இயலாதவர்கள் என்றால் அவர்கள் சொல்லுவதனையும் நம்மாள் விளங்கிக்கொள்வது கடினமே.

தமிழக நிதிநிலை அறிக்கை - 2011-12 ல் மாற்றுத்திறனாளர்களின் நிலை

               சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். என்று இன்று (ஆக.4) பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது.

குறுந்தகடு வெளியீடு - மாற்றுத்திறனுடையோருக்காக.

மாற்றுத்திறனுடையோருக்காக பல்வேறு வகைகளில் பல உபயோகமான செயல்களைச் செய்துவரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் திரு. என். முரளிதரன் அவர்கள் தற்சமயம் முயற்சி செய்து வெற்றிபெற்றுள்ள வென்று காட்டியுள்ளதுதான் போட்டித் தேர்வுகளுக்காக பயின்றுவரும் மாற்றுத் திறனுடையோர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படக்கூடிய ஒலிவடிவிலான குறுந்தகடு. மாநில அரசு, மத்திய 

சாதனைப் பெண் - ஜெனிதா ஆண்டோ

குழந்தையைப் பெற்ற அனைத்து தாய், தந்தையருக்கும் தான் பெற்ற குழந்தையை இப்படி வளர்க்க வேண்டும் அப்படி வளர்க்க வேண்டும், வருங்காலத்தில் அவர்கள் இன்னார் ஆகவேண்டும் என்ற கனவுகள் இருக்கும். அப்படியே இல்லாவிட்டாலும் தனது குழந்தை சமூகத்தில் பெயர்செல்லும்படியாக வாழவேண்டும் என்ற ஆசையாவது இருக்கும். ஜெனிதா ஆண்டோ என்ற இந்த குழந்தையைப் பெற்ற திரு.காணிக்கைராஜ் தம்பதியருக்கும் ஒரு ஆசையிருந்தது. அது தனது மகளை நடனப்பள்ளியில் சேர்த்து ஒரு நாட்டியக் கலைஞராக ஆக்க

அரசு போட்டித்தேர்வுகளுக்கான குறுந்தகடு வெளியீட்டு விழா

       அரசு போட்டித்தேர்வுகளை சந்திக்கும் மாற்றுத் திறனாளர்களின் வசதிக்காகவும் அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாகவும் UPSC, TNPSC போன்ற அரசுத் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாகவும் கற்பித்தலை எளிமைப்படுத்தக்கூடிய ஒலிவடிவ குறுந்தகடு ஒன்றினை திருச்சிராப்பள்ளி மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.கலைச்செல்வன் அவர்கள்   அதன் வெளியீட்டு விழா வரும் 26.07.2011 அன்று காலை பதினோரு மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் டிசம்பர் - 3 விடுப்பு

        கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கு உலக மாற்றுத்திறனாளர் தினமான டிசம்பர்-3ம் தேதி மாநில அரசு மற்றுத் மாநில அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.       இந்த சலுகைகளை மற்ற அனைத்துத்துறையினரும் பெற்றுவந்துள்ள நிலையில்  போக்குவரத்துத்துறைக்கு மட்டும் வழங்கப்படவில்லை.  இதனை அறிந்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் போக்குவரத்துத்துறையிலிருக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அவர்களுக்கும் டிசம்பர் - 3 அன்று சற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார்.

டிசம்பர்-3 2010 அன்று நடைபெற்ற ஊர்வலத்தைப்பற்றிய நாளிதல் செய்தி நறுக்குகள்

                  டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் மறுநாள் காலை செய்தி  தாள்களில்  பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்

டிசம்பர்-3 ஊர்வலத்தின் டீவி ஒளிபரப்பு

                டிசம்பர்-3 (இன்று) காலை நடைபெற்ற "விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தின்" டீவி நிகழ்ச்சி

டிசம்பர்-3 2010 அன்று
கிளாக் டீவியில் ஒளிபரப்பப்பட்டது
 

S.TV-யில் ஒளிபரப்பப்பட்டது

Ten TV-யில் ஒளிபரப்பப்பட்டது

 


டிசம்பர்-3 2010 அன்று மாலை செய்தி நறுக்குகள்

                      டிசம்பர்-3 2010 உலக ஊனமுற்றோர் தினத்தன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் பற்றிய செய்திகள் அன்று  மாலை செய்தி  தாள்களில்  பிரசுரமான செய்திகளின் செய்தி நறுக்குகள்

மாலை முரசு

மாலை மலர்

காவல்துறையின் கனிவு

                         இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலத்தில் எனது மனதை பாதித்த ஒரு நிகழ்வினை இந்த பதிவின் மூலம் கூற கடமைப்பட்டுள்ளேன்.

                     மாற்றுத்திறனுடையோரின் உணர்வை மதித்து நமக்கு எந்த இடத்திலும் எந்தஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த ஊர்வலத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு வழங்கிய திருச்சி கண்டோண்மெண்ட் காவல் நிலையத்திற்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வது இந்த நேரத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். 

வழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்.

               டிசம்பர்-3 உலக ஊனமுற்றோர் (மாற்றுத்திறனுடையோர்) தினத்தினை முன்னிட்டு நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒரு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது.

                இவ்வூர்வலம் திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையம் முன்புள்ள காதிகிராப்ட் மைதானத்திலிருந்து அரிஸ்டோ வழியாக மிளகுபாறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெஸ்லி பள்ளி எதிரில் முடிக்க கிட்டமிடப்பட்டு காலை 10.30 மணிக்கு துவக்கி 11.30 மணிக்குள் திட்டமிடப்பட்டபடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

முக்கியச் செய்தி

                            நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மாற்றத்திறனுடையோர் சம்மந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள், முக்கிய செய்திகள் மற்றும் மாற்றுத்திறனுடையோர்க்கு பயனளிக்கக்கூடும் என நினைக்கும் அனைத்து செய்திகளையும் குறுந்தகவல் (SMS) மூலம் சற்றேரக்குறைய 600 நபர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கின்றது. 

மாற்றுத்திறனுடையோர்க்கு ஊர்திப்படி (Conveyance Allowance) உயர்வு

                   தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனுடையோர்க்கான பயணப்படி எனப்படும் ஊர்திப்படியினை ரூபாய் 300லிருந்து ரூபாய் 1000மாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

செந்தமிழும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புகளும்

                   "சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும்
                    என் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்"

                                            என்கிற பாவேந்தரின் வாக்கினைப் பின்பற்றி, தமிழின் தொண்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாட்டுக்கலையறிவு வெளிப்பாடு, பிற மொழித்தாக்கமில்லாத்தன்மை, குறைவற்ற இலக்கிய வளம், உயர் சிந்தனைகள், கலையிலக்கிய தனித்தன்மை, மொழிக்கோட்பாடுகள் போன்ற டசெம்மொழித்தகுதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருவதை வரலாறுகள் சொல்கின்றன.

நன்றி அறிவிப்பு பிரச்சாரம்

                    கடந்த 19.08.2008 அன்று தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளர்களும் ஒன்றினைந்து பதினோரம்சக் கோரிக்கைகளை வழியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.  அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் அதில் ஒன்பது கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டார்.  அதுமுதல் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்காக பல திட்டங்களை அறிவித்துவருகிறார்.  

                     அதற்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றிதெரிவிப்பதற்காகவும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரியும் குமரிமுதல் கோட்டைவரை நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுத்துறை

LAB TECHNICIAN COURSES: (DMLT)
இரத்தப் பரிசோதகர் பயிற்சி:

             மேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 
கடைசித்தேதி : 13.09.2010
தகுதி                  : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)
வயது வரம்பு  : 18 முதல் 30 வயது வரை
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 
மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு மார்பளவு புகைப்படம், மற்றும் படித்ததற்கான சான்றிதல்களுடன் மாற்றுத்திறனுடையோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏமாற்றும் ஏர்டெல் பேட்டரி கார்கள்

                     பல முக்கியமான இரயில் நிலையங்களில் தனியார் நிறுவனமான பார்திஏர்டெல் மூலமாக பேட்டரி மூலம் ஓடக்கூடிய அருமையான கார்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன.  இது இந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும், சமூகசேவைக்காகவும் இருக்கலாம்.  எந்த வகையில் இருந்தாலும் அந்த முயற்சியினை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு அருமையான திட்டமாகும். அதற்காகத்தான் அந்த நிறுவனத்தினை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் எனக் கூறினேன்.

                   இத்திட்டம் ஏர்டெல் நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் அனைவருக்கும் அருமையான சேவையை செய்தன இந்த பேட்டரி கார்கள்.  நாட்கள் செல்லச்செல்ல அரசாங்கத்தின் திட்டங்களைப்போன்றே இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது.  காரணமாக இடையிடையே நடக்கும் சம்பவங்களைக் கூறினாலும் நேற்று சென்னையிலும் திருச்சியிலும் நடந்த சம்பவங்களைக் கூறலாம்.

அரசு வேலை

              திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது விநியோக திட்டம் கூட்டுறவு  சங்கத்தின் துணைப் பதிவாளரால் அறிவிக்கப்பட்ட மாதம் ரூபாய் 3000ம் தொகுப்பூதியம் கொண்ட 171 விற்பனையாளர் பணியிடங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரை செய்யப்படவுள்ளது. 

கல்விக்கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் விலக்கு


                         கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரியார் ஈ.வி.ஆர் கல்லூரியிலிருந்து இரண்டாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவனிடமிருந்து என்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. 

                          அதே கல்லூரியில் சென்றவருடம் மாற்றுத் திறனுடையோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். (மற்றவர்கள் பின்னோக்கிய இடுகைகளை பார்க்கவும்). அந்த முகாம் மூலமாக நமது மக்களுக்கு அரசின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மாணவமாணவியருக்கு கல்விக்கட்டணம் இரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணையின் நகல் மற்றும் மற்றபிற மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசாணையின் நகல்களும் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.