கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கு உலக மாற்றுத்திறனாளர் தினமான டிசம்பர்-3ம் தேதி மாநில அரசு மற்றுத் மாநில அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த சலுகைகளை மற்ற அனைத்துத்துறையினரும் பெற்றுவந்துள்ள நிலையில் போக்குவரத்துத்துறைக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இதனை அறிந்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் போக்குவரத்துத்துறையிலிருக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அவர்களுக்கும் டிசம்பர் - 3 அன்று சற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார்.
இதைப் படிங்க முதல்ல
நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label அரசாங்க சலுகைகள். Show all posts
Showing posts with label அரசாங்க சலுகைகள். Show all posts
மாற்றுத்திறனுடையோர்க்கு ஊர்திப்படி (Conveyance Allowance) உயர்வு
தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனுடையோர்க்கான பயணப்படி எனப்படும் ஊர்திப்படியினை ரூபாய் 300லிருந்து ரூபாய் 1000மாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
அதற்கான அரசாணையைப் படிக்க இங்கே சொடுக்கவும்
Labels:
அரசாங்க சலுகைகள்,
அரசாணைகள்,
அரசு வேலை,
கருணாநிதி,
முதல்வர்
மாற்றுத்திறனுடையோர் மறுவாழ்வுத்துறை
LAB TECHNICIAN COURSES: (DMLT)
இரத்தப் பரிசோதகர் பயிற்சி:
மேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
கடைசித்தேதி : 13.09.2010
தகுதி : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)
வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இரத்தப் பரிசோதகர் பயிற்சி:
மேற்கண்ட இரண்டு வருட லேப் டெக்னீசியன் கோர்ஸ் இலவசமாக பயில விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
கடைசித்தேதி : 13.09.2010
தகுதி : பனியிரண்டாம் வகுப்பு (அறிவியல்)
வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை
ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு மார்பளவு புகைப்படம், மற்றும் படித்ததற்கான சான்றிதல்களுடன் மாற்றுத்திறனுடையோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
Labels:
DDAWO,
அரசாங்க சலுகைகள்,
சமூகநலம்,
செய்திகள்
கல்விக்கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் விலக்கு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரியார் ஈ.வி.ஆர் கல்லூரியிலிருந்து இரண்டாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவனிடமிருந்து என்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதே கல்லூரியில் சென்றவருடம் மாற்றுத் திறனுடையோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். (மற்றவர்கள் பின்னோக்கிய இடுகைகளை பார்க்கவும்). அந்த முகாம் மூலமாக நமது மக்களுக்கு அரசின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மாணவமாணவியருக்கு கல்விக்கட்டணம் இரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணையின் நகல் மற்றும் மற்றபிற மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசாணையின் நகல்களும் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.
Labels:
அரசாங்க சலுகைகள்,
அரசாணைகள்,
கல்வி,
சந்திப்பு,
திருச்சி சங்கம்
பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை சிறப்பு முகாமில் அமைச்சர் பங்கேற்பு
திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணச்சலுகை மற்றும் திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நிர்ணயித்த இலக்கை தாண்டியது மாற்றுத்திறனாளி பள்ளி சேர்க்கை
திருச்சி: ""தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துள்ளது,'' என்று கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அகஸ்டின் பீட்டர் பாத்திமா தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இரண்டு சதவீதம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக புள்ளவிபரம் தெரிவிக்கிறது.
அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 5,109 பேர் இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது. அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், கிராம செவிலியர்கள், மறுவாழ்வுத்திட்ட அலுவலர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்த கல்வியாண்டில் மட்டும் 319 மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை, எஸ்.எஸ்.ஏ., சார்பில் மொத்தம் 5,235 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்கை தாண்டி, திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதி வரை தொடரும் பணியில் மேலும் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுவர். மனநிலை பாதிக்கப்பட்ட மாணவரை, சாதாரண மாணவர் படிக்கும் பள்ளிகளில் சேர்க்க முடியாது. சிறப்புப்பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்
நன்றி:தினமலர்.காம்
Labels:
அரசாங்க சலுகைகள்,
செய்திகள்,
மற்ற வலை பதிவுகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.
பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.
நன்றி:சிவாஜி டீவி. காம்
வீட்டிலேயே கல்வி
கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீட்டிற் கே சென்று சிறப்பாசிரியர்கள் கல்வி வழங்க வேண்டும்” என கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய கண்காணிப்பாளர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மாவட்டத்தில் ஆறு முதல் 14 வயதிற்கு உட் பட்ட பள்ளி செல்லா குழந் தைகள் அனைவரையும் கண்டறிந்து, ஒரு மாதத் திற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.
ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்
ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை
ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் மாற்றுதிறனாளர்களுக்கு தனித்துறை
மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சர் கருணாநிதி நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில், உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களைக் குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல்
Labels:
அரசாங்க சலுகைகள்,
கருணாநிதி,
முதல்வர்
மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்
பார்வையற்ற 95 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கினார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை
திரு.சுப.வீரபாண்டியன் ஐயா அவர்களின் உரை
மார்ச் 1 ஆம் தேதி காலை, கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். பேசி முடிந்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. “இன்றைக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறாய் . உன் பேச்சு என் மனதைத் தொட்டது. உடல் ஊனமுற்ற அந்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்கிறேன்” என்று அவர் சொன்னபோது வியப்பிலிருந்து விடுபட எனக்கு ஒரு நிமிடமாயிற்று.
Labels:
அரசாங்க சலுகைகள்,
அரசாணைகள்,
மற்ற வலை பதிவுகள்
2010 - 2011 ஆம் ஆண்டுக்கான தமிழக வரவு செலவு திட்டத்தில் மாற்றுத் திறனாளர் களுக்கான அம்சங்கள்
தமிழக அரசின் வலைத் தலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு குறிப்பிட்ட பகுதி மட்டும் இங்கே வழங்கப்படிருகின்றது.
கடந்த 4ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கீதாஜீவன் தகவல்!
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஊனமுற்றோர் நலனிற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் நடந்த விழாவில் தெரிவித்தார்.
மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமையை நிலை நாட்டுவோம்: கருணாநிதி உறுதி
மாற்றுத் திறன் படைத்தோருக்கு அரசு சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு எனவும், தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும்
Subscribe to:
Posts (Atom)

