இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label வேலைவாய்ப்பு அலுவலகம். Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு அலுவலகம். Show all posts

குறுந்தகடு வெளியீடு - மாற்றுத்திறனுடையோருக்காக.

மாற்றுத்திறனுடையோருக்காக பல்வேறு வகைகளில் பல உபயோகமான செயல்களைச் செய்துவரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் திரு. என். முரளிதரன் அவர்கள் தற்சமயம் முயற்சி செய்து வெற்றிபெற்றுள்ள வென்று காட்டியுள்ளதுதான் போட்டித் தேர்வுகளுக்காக பயின்றுவரும் மாற்றுத் திறனுடையோர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படக்கூடிய ஒலிவடிவிலான குறுந்தகடு. மாநில அரசு, மத்திய 

அரசு போட்டித்தேர்வுகளுக்கான குறுந்தகடு வெளியீட்டு விழா

       அரசு போட்டித்தேர்வுகளை சந்திக்கும் மாற்றுத் திறனாளர்களின் வசதிக்காகவும் அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாகவும் UPSC, TNPSC போன்ற அரசுத் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாகவும் கற்பித்தலை எளிமைப்படுத்தக்கூடிய ஒலிவடிவ குறுந்தகடு ஒன்றினை திருச்சிராப்பள்ளி மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.கலைச்செல்வன் அவர்கள்   அதன் வெளியீட்டு விழா வரும் 26.07.2011 அன்று காலை பதினோரு மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

அரசு வேலை

              திருச்சிராப்பள்ளி மாவட்ட பொது விநியோக திட்டம் கூட்டுறவு  சங்கத்தின் துணைப் பதிவாளரால் அறிவிக்கப்பட்ட மாதம் ரூபாய் 3000ம் தொகுப்பூதியம் கொண்ட 171 விற்பனையாளர் பணியிடங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரை செய்யப்படவுள்ளது. 

மாற்றுத்திறனுடையோர்க்கு சுயதொழில் விழிப்புணர்வு மற்றும் வேலை வாய்ப்பு முகாம்

                   திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியவை திருச்சிராப்பள்ளி மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளர்களுக்கான சுயதொழில் விழிப்புணர்வு முகாம் மற்றும் வேலை வாய்ப்பு முகாமினை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடத்தவிருக்கின்றது.