நாம் அன்றாட வாழ்வில் பலவிதமான மாற்றுத்திறனாளர்களை சந்திக்கின்றோம். அவர்களில் காதுகேளாத மாற்றுத்திறனாளர்களிடம் மட்டும் பழகுவது சற்று கடினமாக இருக்கின்றது. காரணம் நாம் என்ன சொல்கின்றோம் என்பதனை அவர்கள் விளங்கிக்கொள்ளுமாறு நம்மால் பேச இயலாதுபோகின்றது. மேலும் அவர்கள் வாய் பேச இயலாதவர்கள் என்றால் அவர்கள் சொல்லுவதனையும் நம்மாள் விளங்கிக்கொள்வது கடினமே.
இதைப் படிங்க முதல்ல
நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts
கல்விக்கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் விலக்கு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரியார் ஈ.வி.ஆர் கல்லூரியிலிருந்து இரண்டாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவனிடமிருந்து என்னுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதே கல்லூரியில் சென்றவருடம் மாற்றுத் திறனுடையோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். (மற்றவர்கள் பின்னோக்கிய இடுகைகளை பார்க்கவும்). அந்த முகாம் மூலமாக நமது மக்களுக்கு அரசின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. மாணவமாணவியருக்கு கல்விக்கட்டணம் இரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதற்கான அரசாணையின் நகல் மற்றும் மற்றபிற மாணவர்கள் சம்மந்தப்பட்ட அரசாணையின் நகல்களும் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது.
Labels:
அரசாங்க சலுகைகள்,
அரசாணைகள்,
கல்வி,
சந்திப்பு,
திருச்சி சங்கம்
மாற்றுத்திறனாளர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விழா
திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மற்றும் நேயம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர் மற்றும் மாற்றுத் திறனுடையோரின் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா இன்று காலை திருச்சி, மரக்கடை, சையது முர்துசா பள்ளியில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயனடைந்தனர்.
இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.பி. மாரிக்கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
Labels:
கல்வி,
கொண்டாட்டங்கள்,
சந்திப்பு,
திருச்சி சங்கம்,
விழாக்கள்
Subscribe to:
Posts (Atom)
