இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

மாற்றுத்திறனுடையோர்க்கு ஊர்திப்படி (Conveyance Allowance) உயர்வு

                   தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனுடையோர்க்கான பயணப்படி எனப்படும் ஊர்திப்படியினை ரூபாய் 300லிருந்து ரூபாய் 1000மாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி அறிவிப்பு பிரச்சாரம்

                    கடந்த 19.08.2008 அன்று தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளர்களும் ஒன்றினைந்து பதினோரம்சக் கோரிக்கைகளை வழியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.  அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் அதில் ஒன்பது கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டார்.  அதுமுதல் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்காக பல திட்டங்களை அறிவித்துவருகிறார்.  

                     அதற்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றிதெரிவிப்பதற்காகவும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரியும் குமரிமுதல் கோட்டைவரை நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இனி நாம் இரயில் பெட்டியில் முன்பதிவின்றி பயணம் செய்யலாம்.

             கடந்த 30.06.2009 வரை மாற்றுத்திறனுடையோராகிய நாம் இரயிலில் பயணம் செய்ய எட்டுபேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இணைக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் நாம் சாதாரண பயணச்சீட்டுடன் பயணம் செய்யும் வசதியிருந்தது.

             ஆனால் 01.07.2009 முதல் அந்த சிறப்புப் பெட்டி முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்டது. அதில் மாற்றுத்திறனுடையோர் முன்பதிவு செய்தே பயணம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

இனி பேருந்திலும் பாதுகாவலருடன் பயணம் செய்யலாம்

மாற்றுத்திறனுடையோர் இரயில் பயணத்தின்போது எப்படி பாதுகாவலருடன் பயணம் செய்கின்றனரோ, அதனைப்போன்று இனி பேருந்திலும் பயணம் செய்யலாம் - என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. 

அந்த அறிவிப்பிற்கு தமிழக அரசு 30-05-2010 அன்றைய தேதியில் அரசாணை வழங்கியுள்ளது. 

அதன்படி ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்குட்பட்டு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அவரவர் விருப்பம் போல பாதுகாவலருடனோ அல்லது தனித்தோ இனி பேருந்தில் பயணம் செய்யலாம்.

மாற்றுத்திறனாளர்கள் 38 பேருக்கு புத்தகம் கட்டுநர் பணி

பார்வையற்ற 38 மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் புத்தகம் கட்டுநர் பணியமர்த்தப்படும் என கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார் - செய்தி கலைஞர் தொலைக்காட்சி.

விரிவான செய்திகள் பின்னர்.

மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு

மாற்றுததிறனாளிகளநலவாரியமமற்றுமஅதனஅலுவல்சாரஉறுப்பினர்களினமூன்றாண்டபதவிக்காலம் முடிவடை‌ந்ததையொ‌ட்டு இவ்வாரியத்தினஉறுப்பினர்களகுழுவை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி திருத்தியமைத்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மாற்றுததிறனாளிகளினஉரிமைகளைபபாதுகாக்குமநோக்கிலஅவர்களுடைய முன்னேற்றத்திலசிறப்புக்கவனம் செலுத்துவதற்காதமிழஅரசதலைமைசசெயலகத்திலசமூநலமமற்றுமசத்துணவுத்திட்டததுறையிலிருந்தபிரித்து, தமதநேரடி கண்காணிப்பிலமாற்றுததிறனாளிகளநலத்துறஎன்னுமஒரபுதிதுறையஉருவாக்கியுள்முதலமைச்சரகருணாநிதி அத்துறைக்கஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைசசெயலாளராகவுமநியமனமசெய்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் மாற்றுதிறனாளர்களுக்கு தனித்துறை

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சர் கருணா‌நி‌தி நேரடி மேற்பார்வையில் இயங்கும் எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில், உடல் ஊனமுற்றோர் என்ற பட்டியலில் மனித சமுதாயத்தில் காது கேளாதவராய் - கண் தெரியாதவராய் - வாய் பேச முடியாதவர்களாய் - கைகால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய் உள்ள அனைவருமே இடம் பெறுகிறார்கள். இவர்களைக் குறிப்பிட்ட அவயவங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று ஒதுக்கிவிடாமல்

மாற்று திறனாளிகள் 95 பேருக்கு ஆசிரியர் பணி நியமன ஆணை: கருணாநிதி வழங்கினார்

பார்வையற்ற 95 மாற்றுததிறனாளிகளுக்கஅரசஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலபட்டதாரி ஆசிரியர்களாகபபணி நியமஆணைகளமுதலமைச்சரகருணாநிதி இன்றவழங்கினார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 95 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்து, அவர்களில் 10 பேருக்கு நியமன ஆணைகளை

முதல்வரின் அறிக்கை


ஊனமுற்றோருக்கான பெரிய திட்டத்தை நடைமுறை படுத்த நடவடிக்கை எடுப்போம்: கருணாநிதி

திருச்சி, மார்ச்.4-திருச்சியில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில், மாற்றுத் திறனாளிகளின் நன்மைக்காக ஐ.நா. மன்றத்திலே எல்லா நாடுகளும் ஒத்துக் கொண்டு ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியா முழுமையும் உள்ள ஊனமுற்றோருக்கு- அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்பந்தப்படி வசதி வாய்ப்புகள், அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனவா என்றால் இல்லை. நான் அதைப்பற்றி இந்த ஆண்டு நம்முடைய நிதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட விருக்கின்ற நிதி நிலை அறிக்கையில் - மத்திய அரசு அன்றைக்கு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றி -இந்தியாவிலே இருக்கின்ற ஊனமுற்றோருக்கெல்லாம் நன்மைகளைச் செய்ய வேண்டும், உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக இருக்கிறோம். தமிழ்நாடு அரசும் சேர்ந்து தான் இந்திய அரசோடு ஒத்துழைத்து அந்த இயலாதவர்களுக்கு மாற்றுத் திறனுடையோருக்கு வழங்கப்படுகின்ற காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற முறையில் தான் அதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இப்போது ஏழையெளியோருக்கு குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விட பெரிய திட்டம், இந்தத் திட்டம். இந்தத் திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கும்போதே, அந்தத் திட்டமும் நடைமுறைக்கு வர இந்த அரசு ஆவன செய்யும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

நன்றி: மாலைமலர்
http://www.maalaimalar.com/2010/03/04040203/political.html

மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமையை நிலை நாட்டுவோம்: கருணாநிதி உறுதி

மாற்றுத் திறன் படைத்தோருக்கு அரசு சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு எனவும், தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும்

ஊனமுற்றோருக்கான உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை: கலைஞர் உறுதி

மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் இதற்கு அனுகூலமான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

21.01.2010 பாராட்டு விழாவில் தமிழக முதல்வரின் உரை

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.