இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label டாஸ்மாக் பணியாளர். Show all posts
Showing posts with label டாஸ்மாக் பணியாளர். Show all posts

டாஸ்மாக்-கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்கள் அமைப்பு மாநில கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் உடல் ஊனமுற்றோர் பணியாளர் நல்வாழ்வுச் சங்கத்தின் சார்பில் (இணைப்பு : தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு) 13.06.2010 அன்று சங்குருநாத மகாமுனிவர் சன்னதி, திருவாணைக்கோவில், திருச்சி என்ற இடத்தில் சங்க "சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்" நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.நாச்சியப்பன் தலைமையேற்றார். திரு. அரியக்குமார், மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்.  திரு.பூபதி, மாநில துணைத்தலைவர்,  தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.சையதுமுஸ்தபா, மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. மற்றும் திரு.புஷ்பராஜ், தென்மண்டல பொருளாளர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.மாரிக்கண்ணன், செயலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

திரு.பாரூக் - சிவகங்கை, திரு.முருகன் - மதுரை, திரு.பழனிச்சாமி - விழுப்புரம், திரு.கந்தகுமார் - திருநெல்வேலி, திரு.வேல்ச்சாமி - கடலூர், திரு. சண்முகம் - தூத்துக்குடி,  திரு. ஆறுமுகம் - திருச்சி திரு.எஸ்.சோமசுந்தரம் - கோவை ஆகியோர்