இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

தமிழக நிதிநிலை அறிக்கை - 2011-12 ல் மாற்றுத்திறனாளர்களின் நிலை

               சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். என்று இன்று (ஆக.4) பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் டிசம்பர் - 3 விடுப்பு

        கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளர்களுக்கு உலக மாற்றுத்திறனாளர் தினமான டிசம்பர்-3ம் தேதி மாநில அரசு மற்றுத் மாநில அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.       இந்த சலுகைகளை மற்ற அனைத்துத்துறையினரும் பெற்றுவந்துள்ள நிலையில்  போக்குவரத்துத்துறைக்கு மட்டும் வழங்கப்படவில்லை.  இதனை அறிந்த இன்றைய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் போக்குவரத்துத்துறையிலிருக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அவர்களுக்கும் டிசம்பர் - 3 அன்று சற்செயல் விடுப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார்.

ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை

              ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

            ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.