இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

தமிழக நிதிநிலை அறிக்கை - 2011-12 ல் மாற்றுத்திறனாளர்களின் நிலை

               சென்னை, ஆக.4 (டிஎன்எஸ்) அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும். இதற்கென தலைமைச் செயலாளரின் கீழ், பல்துறை செயலாளர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து அனைத்து அரசுப் பணிகளிலும் மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும். என்று இன்று (ஆக.4) பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது.

அதிகாரி முருகன் ஐ.ஏ.எஸ்(!) - சிந்தனையில் ஊனம்

                        பார்ப்பனிய நஞ்சைச் சுமந்து வரும் வார ஏடு துக்ளக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.(!) அதிகாரி முருகன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மீது பாய்ந்து கடித்திருக்கிறார். 30.06.2010 துக்ளக்கில் “உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு, அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது வேறு என்பதைத் தமிழக முதல்வர் உணரவேண்டும் ” என்று எழுதியிருக்கிறார். இதைக் கண்டித்துப் பார்வை யற்றோர் அமைப்புகளின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதமும் அடுத்த (14.7.2010) துக்ளக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்புகள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையயத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:
கல்வித் தகுதி :  குறைந்தது 10 வகுப்பு தேர்ச்சி
வயது                 :  குறைந்தது 21 (01.07.2010 அன்று) அதிகபட்சம் 40வயது
ஊனத்தின் சதவீதம் : 40 முதல் 50க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டணத்திலிருந்து முழு விலக்களிக்கப்படுகிறது. (வருமான உச்சவரம்பின்றி)

பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை சிறப்பு முகாமில் அமைச்சர் பங்கேற்பு

               திருச்சி: திருச்சியில் உள்ள பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கி, பள்ளிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி, மாதாந்திர உதவித்தொகை, இலவச பஸ் பயணச்சலுகை மற்றும் திருமண நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு

               நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து அதற்கான நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை செயல்படுத்திட தற்போது முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

              பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்திடும் விதமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப்படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணத்தை ரத்துசெய்ததுடன், இந்த கல்வியாண்டு முதல் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேணடிய தனிக் கட்டணத்தை ரத்து செய்தும், மாநில அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் எவ்விதத்திலும் தடையின்றிப் பெற்றுப் பயன் அடைவதற்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவிகளைப் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பினை முற்றிலும் ரத்து செய்தும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

                   முதல்வரின் உத்தரவால் 22,685 மாற்றுத் திறனாளிகள் ஆண்டுக்கு 7.71 கோடி ரூபாய் அளவிற்கு பயன்பெறுவர் எனக் கூறப்படுகிறது.

வீட்டிலேயே கல்வி

                    கடுமையாக பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, வீட்டிற் கே சென்று சிறப்பாசிரியர்கள் கல்வி வழங்க வேண்டும்” என கலெக்டர் வள்ளலார் உத்தரவிட்டார்.அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய கண்காணிப்பாளர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக் கான ஆலோசனைக் கூட் டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வள்ளலார் பேசியதாவது:மாவட்டத்தில் ஆறு முதல் 14 வயதிற்கு உட் பட்ட பள்ளி செல்லா குழந் தைகள் அனைவரையும் கண்டறிந்து, ஒரு மாதத் திற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும். 

மாற்றுத்திறனாளர்கள் 38 பேருக்கு புத்தகம் கட்டுநர் பணி

பார்வையற்ற 38 மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் புத்தகம் கட்டுநர் பணியமர்த்தப்படும் என கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார் - செய்தி கலைஞர் தொலைக்காட்சி.

விரிவான செய்திகள் பின்னர்.

ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்

            ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  
         2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.

மாற்று திறனாளிகள் நலவாரிய குழு திருத்தி அமைப்பு

மாற்றுததிறனாளிகளநலவாரியமமற்றுமஅதனஅலுவல்சாரஉறுப்பினர்களினமூன்றாண்டபதவிக்காலம் முடிவடை‌ந்ததையொ‌ட்டு இவ்வாரியத்தினஉறுப்பினர்களகுழுவை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி திருத்தியமைத்து‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக தமிழஅரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மாற்றுததிறனாளிகளினஉரிமைகளைபபாதுகாக்குமநோக்கிலஅவர்களுடைய முன்னேற்றத்திலசிறப்புக்கவனம் செலுத்துவதற்காதமிழஅரசதலைமைசசெயலகத்திலசமூநலமமற்றுமசத்துணவுத்திட்டததுறையிலிருந்தபிரித்து, தமதநேரடி கண்காணிப்பிலமாற்றுததிறனாளிகளநலத்துறஎன்னுமஒரபுதிதுறையஉருவாக்கியுள்முதலமைச்சரகருணாநிதி அத்துறைக்கஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைசசெயலாளராகவுமநியமனமசெய்துள்ளார்.

ஊனமுற்றோர் துறை - ஜெ. பெருமை

              ஊனமுற்றோர் நலனுக்கு தனித்துறை ஏற்படுத்தியது நான் தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

            ஊனமுற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை 1981ல் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். 1992ல், ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கென, ஒரு தனித் துறையையே நான் ஏற்படுத்தினேன். 1994ல், முதன் முறையாக, எனது அரசுதான், ஊனமுற்றோருக்கான மாநிலக் கொள்கையை வகுத்தது. ஊனமுற்றோருக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு ஊனமுற்றோர் விதிகள்2002 எனது அரசால் இயற்றப்பட்டது.

2010 - 2011 ஆம் ஆண்டுக்கான தமிழக வரவு செலவு திட்டத்தில் மாற்றுத் திறனாளர் களுக்கான அம்சங்கள்

தமிழக அரசின் வலைத் தலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு குறிப்பிட்ட பகுதி மட்டும் இங்கே வழங்கப்படிருகின்றது.

மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமையை நிலை நாட்டுவோம்: கருணாநிதி உறுதி

மாற்றுத் திறன் படைத்தோருக்கு அரசு சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
""மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.

அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு எனவும், தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும்

ஊனமுற்றோருக்கான உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை: கலைஞர் உறுதி

மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் இதற்கு அனுகூலமான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

21.01.2010 பாராட்டு விழாவில் தமிழக முதல்வரின் உரை

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.

ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.இது தொடர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உடல் ஊனமுற்றோர் நம்முடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளாக மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு இருக்கின்ற குறைகளை ஒவ்வொருவரும் தீர்க்கப் பாடுபட வேண்டும். அதற்காகவே டிசம்பர் 3ஆம் நாள் உலக ஊனமுற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.தே.மு.தி.க இதை உணர்ந்து அவர்களுக்கென உடல் ஊனமுற்றோர் நல அணி உருவாக்கியதோடு, கடந்த 27 ஆண்டுகளாக எனது பிறந்தநாளில் உடல் ஊனமுற்றோர்களுக்கு நலஉதவிகளைச் செய்து வருகிறேன். தமிழக அரசு ஊனமுற்றோருக்கு வாரியம் அமைத்தது. ஆனால் ஊனமுற்றோருக்கு முறையான சலுகைகள் போதிய அளவில் வழங்கப்படவில்லை. மாதந்தோறும் ரூ.500 உதவி வழங்குவதாக

இலவச ஜெய்ப்பூர் ஃபுட் வழங்கும் முகாம்

இந்த முகாமில் அனைத்து மாற்றுத்திறனுடையோரும் கலந்துகொண்டு பயனடையுமாறு நமது திருச்சிராப்பள்ளி உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இந்த படங்களில் இருப்பதை அப்படியே படிக்க முடியவில்லையானால் அந்த படத்தை ஒரு முறை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) உடனே அந்த படம் ஒரு முழு பக்கத்திற்கு மாறும் இப்பொழுது அந்த படம் எளிதாக படிக்கும் அளவிற்கு இருக்கும் அதனை உங்களது கணிணிக்கும் பதிவிறக்கம் (download) செய்துகொள்ளலாம்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயல்பாடுகளின் அடுத்த முயற்சியாக மாற்றுதிறனுடையோருக்கு பெரிதும் உதவும் வகையிலும், அவர்களுக்கு வசதியாகவும், அவர்களின் வேலை பளுவை அதிகரிக்காத வகையிலும் அவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதிக்கே சென்று அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நல திட்டங்களை எடுத்துரைக்கவும் உரியவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உதவுவதற்கும் மேலும் அவர்களின் குறைகளை கேட்டு உதவுவதற்கும் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனை நிறைவேற்றிடும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்களை அமைப்பது எனவும் அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமிப்பது எனவும் முடிவு