இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

வழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம்.

               டிசம்பர்-3 உலக ஊனமுற்றோர் (மாற்றுத்திறனுடையோர்) தினத்தினை முன்னிட்டு நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒரு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது.

                இவ்வூர்வலம் திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையம் முன்புள்ள காதிகிராப்ட் மைதானத்திலிருந்து அரிஸ்டோ வழியாக மிளகுபாறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று வெஸ்லி பள்ளி எதிரில் முடிக்க கிட்டமிடப்பட்டு காலை 10.30 மணிக்கு துவக்கி 11.30 மணிக்குள் திட்டமிடப்பட்டபடி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

செந்தமிழும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புகளும்

                   "சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும்
                    என் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்"

                                            என்கிற பாவேந்தரின் வாக்கினைப் பின்பற்றி, தமிழின் தொண்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாட்டுக்கலையறிவு வெளிப்பாடு, பிற மொழித்தாக்கமில்லாத்தன்மை, குறைவற்ற இலக்கிய வளம், உயர் சிந்தனைகள், கலையிலக்கிய தனித்தன்மை, மொழிக்கோட்பாடுகள் போன்ற டசெம்மொழித்தகுதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருவதை வரலாறுகள் சொல்கின்றன.

ஏமாற்றும் ஏர்டெல் பேட்டரி கார்கள்

                     பல முக்கியமான இரயில் நிலையங்களில் தனியார் நிறுவனமான பார்திஏர்டெல் மூலமாக பேட்டரி மூலம் ஓடக்கூடிய அருமையான கார்கள் வலம்வந்துகொண்டிருக்கின்றன.  இது இந்த நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும், சமூகசேவைக்காகவும் இருக்கலாம்.  எந்த வகையில் இருந்தாலும் அந்த முயற்சியினை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஏனென்றால் முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒரு அருமையான திட்டமாகும். அதற்காகத்தான் அந்த நிறுவனத்தினை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் எனக் கூறினேன்.

                   இத்திட்டம் ஏர்டெல் நிறுவனத்தால் துவங்கப்பட்ட ஆரம்பக்காலத்தில் அனைவருக்கும் அருமையான சேவையை செய்தன இந்த பேட்டரி கார்கள்.  நாட்கள் செல்லச்செல்ல அரசாங்கத்தின் திட்டங்களைப்போன்றே இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது.  காரணமாக இடையிடையே நடக்கும் சம்பவங்களைக் கூறினாலும் நேற்று சென்னையிலும் திருச்சியிலும் நடந்த சம்பவங்களைக் கூறலாம்.

அதிகாரி முருகன் ஐ.ஏ.எஸ்(!) - சிந்தனையில் ஊனம்

                        பார்ப்பனிய நஞ்சைச் சுமந்து வரும் வார ஏடு துக்ளக்கில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.(!) அதிகாரி முருகன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் மீது பாய்ந்து கடித்திருக்கிறார். 30.06.2010 துக்ளக்கில் “உடல் ஊனமுற்றவர்களுக்குச் சலுகை அளிப்பது என்பது வேறு, அவர்களுக்கு அரசு வேலை அளித்து நிர்வாகத்தைச் சீர்குலைப்பது வேறு என்பதைத் தமிழக முதல்வர் உணரவேண்டும் ” என்று எழுதியிருக்கிறார். இதைக் கண்டித்துப் பார்வை யற்றோர் அமைப்புகளின் சார்பாக அனுப்பப்பட்ட கடிதமும் அடுத்த (14.7.2010) துக்ளக் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அரியாமை

துக்ளக் வார இதழ் (30-06-2010) செய்தி:

             தற்போது, தமிழக முதல்வர் திடீரென்று எப்போதும் இல்லாத அளவிற்கு,  உடல் உறுப்புகளில் குறையுள்ளவர்கள்பால் அதிக அக்கரை எடுத்து, அவர்களை "மாற்றுத்திறனாளிகள்" என வகைப்படுத்தி, அவர்களுக்கென்று தனி துறையை ஏற்படுத்தி, பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்.

            1975-ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு வேலை வாய்ப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு முன்னுரிமை அளித்து, அரசு வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் நடைமுறை உண்டு.  இவர்களில் பலரும் அரசு வேலையில் சேர்ந்த பின்னர், ஒழுஙிகீனங்களில் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை - நான் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

டாஸ்மாக்-கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்கள் அமைப்பு மாநில கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் உடல் ஊனமுற்றோர் பணியாளர் நல்வாழ்வுச் சங்கத்தின் சார்பில் (இணைப்பு : தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு) 13.06.2010 அன்று சங்குருநாத மகாமுனிவர் சன்னதி, திருவாணைக்கோவில், திருச்சி என்ற இடத்தில் சங்க "சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்" நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.நாச்சியப்பன் தலைமையேற்றார். திரு. அரியக்குமார், மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்.  திரு.பூபதி, மாநில துணைத்தலைவர்,  தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.சையதுமுஸ்தபா, மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. மற்றும் திரு.புஷ்பராஜ், தென்மண்டல பொருளாளர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.மாரிக்கண்ணன், செயலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

திரு.பாரூக் - சிவகங்கை, திரு.முருகன் - மதுரை, திரு.பழனிச்சாமி - விழுப்புரம், திரு.கந்தகுமார் - திருநெல்வேலி, திரு.வேல்ச்சாமி - கடலூர், திரு. சண்முகம் - தூத்துக்குடி,  திரு. ஆறுமுகம் - திருச்சி திரு.எஸ்.சோமசுந்தரம் - கோவை ஆகியோர்

விருதுகள் பல வெண்ற கவிஞர் திரு.ஏகலைவன்

சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர்,தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் (தன்னம்பிக்கைக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்) என்று தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார். 

தனது முதல் நூலான "பயணவழிப் பூக்கள்" கவிதைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 1)", "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 2)'', ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் போன்ற தொகுப்புகளின் வாயிலாக ஊனமுற்றோரின் சாதனைகளை புத்தகங்களாக்கி இருக்கிறார். "கல்விச் செல்வம்" என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள

ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகப் பெயர்கள் மாற்றம்

            ஊனமுற்றோர் என்ற பெயரில் இயங்கும் அலுவலகங்களின் பெயர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற புதிய பெயரில் மாற்றப்பட்டு இயங்கும் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு  
         2007-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து மேற்கொண்ட முடிவிற்கிணங்க, தமிழகத்தில் ஊனமுற்றோர் என்ற சொல்லால் அழைக்கப்படுபவர்கள் இனி மாற்றுத் திறனாளிகள் என அழைக்கப்படுவார்கள் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து 2010 - 2011-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதல்-அமைச்சர் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.

நண்பர்களுக்கு அழைப்பு

நண்பர்களே இது நம்மைப்போன்ற ஒரு உடல் ஊனமுற்ற நபர் புரிந்த சாதனைகளை விளக்கவும் அது நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்கதியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கே பதிவுசெய்கின்றேன்.
சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பதென்பது இன்றிய நிலையில் ஒரு குதிரைக்கொம்பான விசையமாகத்தான் நம் நாட்டில் இருந்து வருகிறது. அதுவும் கதாநாயகன் என்றால் சொல்லவே தேவையில்லை, வாய்ப்புக் கிடைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கே