இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க செயல்பாடுகளின் அடுத்த முயற்சியாக மாற்றுதிறனுடையோருக்கு பெரிதும் உதவும் வகையிலும், அவர்களுக்கு வசதியாகவும், அவர்களின் வேலை பளுவை அதிகரிக்காத வகையிலும் அவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதிக்கே சென்று அவர்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு அரசின் நல திட்டங்களை எடுத்துரைக்கவும் உரியவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற உதவுவதற்கும் மேலும் அவர்களின் குறைகளை கேட்டு உதவுவதற்கும் சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதனை நிறைவேற்றிடும் விதமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்களை அமைப்பது எனவும் அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமிப்பது எனவும் முடிவு

01/07/2009 உண்ணாவிரதத்தின் சாதனைகள்

01/07/2009 அன்று சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின் விளைவாக நமது தமிழக அரசாங்கம் ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றின் விவரங்களை சென்னை ஊனமுற்றோர் கூட்டமைப்பு அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. அதன் நகல் உங்களின் பார்வைக்கு.

செய்தி நறுக்கு


தினமலர் நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தி நறுக்கு