இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமுற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்: புகார்கள் குறித்து இயக்குநர் பதிலளிக்க உத்தரவு


மதுரை, பிப். 24: மத்திய அரசின் ஊனமுற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தத் தடை கோரிய மனுவுக்கு, ஊனமுற்றோர் நல்வாழ்வுத் துறை இயக்குநர் 6 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசின் நிதி உதவியுடன் ஊனமுற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம், தொண்டு நிறுவனங்கள் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. இதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2007}ம் ஆண்டிலிருந்து மாதந்தோறும் ரூ.3000 மட்டுமே ஊதியம் வழங்குகின்றனர். பலருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு அளிக்கும் ஊதியத்தை தொண்டு நிறுவனம் எங்களுக்கு வழங்கவில்லை.
மேலும் பல்வேறு முறைகேடுகள் இத்திட்டத்தில் நடக்கிறது. எனவே, இத்திட்டத்தை மாநில அரசு தன் பொறுப்பில் ஏற்று நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், பி.ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இத்திட்டம் செயல்படும் விதம், ஆசிரியர்கள் புகார் குறித்து ஊனமுற்றோர் நல்வாழ்வுத் துறை இயக்குநர் 6 வார காலத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
நன்றி:தினமணி

No comments:

Post a Comment