இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

ஊனமுற்றோருக்கான உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை: கலைஞர் உறுதி

மாற்றுத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசும் இதற்கு அனுகூலமான முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உடல் ஊனமுற்றோருக்காக உதவிகள் செய்வதற்கு தொண்டு நிறுவனங்களும், அரசும் பணிகளை மேற்கொண்டுள்ளன. அவர்களுக்கான சட்டங்கள் மூலம் உரிமைகளை பெற வேண்டும் என கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டது என்னை கவர்ந்தது.
ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த 2007ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றோர் நலனுக்காக சட்டம் இயற்றப்பட்டது. அதில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
உடல் ஊனமுற்றோர் எண்ணிக்கை தமிழகத்தில் 18 லட்சம் பேர் உள்ள நிலையில், எந்த கோரிக்ûகையும் பெற அவர்கள் கை நீட்டக்கூடாது என்பதே எனது கருத்து.
ஐக்கிய நாடுகள் சாசனத்தை இந்தியாவில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அனைத்துத்துறைகளிலும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்டவைகளை அளிக்க வேண்டும்.
மாற்றுத்திறன் படைத்தவர்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்டிட சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
மாற்றத்திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளை பெற்றுத்தர தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும். மத்திய அரசும் இதற்கு அனுகூலமான முடிவுகளை மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்..
நன்றி:நக்கீரன்

No comments:

Post a Comment