கடந்த 19.08.2008 அன்று தமிழ்நாடு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளர்களும் ஒன்றினைந்து பதினோரம்சக் கோரிக்கைகளை வழியுறுத்தி ஊர்வலம் சென்றனர். அதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் அவர்கள் அதில் ஒன்பது கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டார். அதுமுதல் தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனுடையோர்க்காக பல திட்டங்களை அறிவித்துவருகிறார்.
அதற்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நன்றிதெரிவிப்பதற்காகவும் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரியும் குமரிமுதல் கோட்டைவரை நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
இந்த பிரச்சார ஊர்வளத்திற்கு தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் கூட்டமைப்பி்ன் தென்மண்டலத் தலைவர் புஷ்பராஜ் அவர்கள் தலைமையேற்று நடத்திச் செல்கிறார். அதற்காக ஆறு மூன்றுசக்கர மோட்டார் வாகனங்களில் பனிரெண்டு பேர் கொண்ட குழுவாக கடந்த 10.09.2010 அன்று கன்னியாகுமாரியில் துவங்கிய இந்த பிரச்சார ஊர்வலம் இன்று இரவு சுமார் 8.00 மணியளவில் திருச்சிராப்பள்ளியை அடைந்தது. திருச்சி வந்த ஊர்வலத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட செயலாளர் மாரிக்கண்ணன், பொருளாளர் வெங்கட்ராமன் மற்றும் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கருமண்டபம் பகுதியில் வரவேற்றனர்.
No comments:
Post a Comment