இதைப் படிங்க முதல்ல

நமது அமைப்பின் மூலமாக, படித்த மற்றும் படிக்காத மாற்றுத்திறனாளர்கள் அனைவருக்கும் தனியார்துறையைச்சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வணிகவளாகங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே மேற்படி பயனடைய விரும்புவோர் தங்களின் தகுதிச் சான்றிதழ்களி்ன் நகல்கள் மற்றும் சுயவிவரகுறிப்புடன் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் மாற்றுத்திறனுடையோர் பற்றிய உடனடித் தகவல்களுக்கு உங்களது செல்பேசியிலிருந்து உங்களது பெயர் மற்றும் மாவட்டம் ஆகியவற்றை 8883448508 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.

மாற்றுத்திறனாளர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் மற்றும் சீருடை வழங்கும் விழா

            திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் மற்றும் நேயம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறனுடைய மாணவ மாணவியர் மற்றும் மாற்றுத் திறனுடையோரின் குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் விழா இன்று காலை திருச்சி, மரக்கடை, சையது முர்துசா பள்ளியில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயனடைந்தனர்.

            இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் திரு.பி. மாரிக்கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.


               நேயம் அறக்கட்டளையின் தலைவர் திரு.என்.டி.மணியன் அவர்கள் தலைமையுரையாற்றினார். திருச்சி தொழிலதிபர் திரு.எஸ்.பிரதீப், சமூக ஆர்வலர் திரு.ஆர்.சுரேஷ் மற்றம் நாகநாதர் உணவகத்தின் மேலாளர் திரு.ஏ.ரவி ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்துகொண்டனர்.

               திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியை டாக்டர். திருமதி.பவித்திரா, திருச்சிராப்பள்ளி மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் திரு.கலைச்செல்வன், திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தின் மேலாளர். திரு.மு.இராதாகிருஷ்ணன், திருச்சி துப்பாக்கிதொழிற்சாலையைச் சார்ந்த திரு. கே.சரவணன், அரசு பள்ளியின் ஆசிரியர் திரு.ஜா.கிஷோர்டேவிட் மற்றும் திருச்சி ஆர்.எம்.எச் கார்பரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.எஸ்.விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

               திரு.ஆர்.பாக்கியராஜ், திரு.இரா.சுப்பிரமணியன், திரு.தேவராஜ், திரு.ஆர். பாலகிருஷ்ணன், திரு.கிளமண்ட் மற்றும் திரு. மணவாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் உரையாற்றியவர்கள்

நோட்டு புத்தகம் மற்றும் சீருடை வழங்குபவர்கள்

No comments:

Post a Comment